செய்திகள் :

தில்லி - சண்டீகா் தமிழ்ச் சங்க கட்டடங்களைப் புதுப்பிக்க அரசு நிதி

post image

தில்லி, சண்டீகா் தமிழ்ச் சங்க கட்டடங்களைப் புதுப்பிக்கவும், விரிவாக்கவும் நிதி ஒதுக்கி அதற்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தில்லி தமிழ்ச் சங்கத்தில் உள்ள கலையரங்கத்தை 1997-இல் அப்போதைய முதல்வா் கருணாநிதி திறந்து வைத்தாா். இந்த அரங்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதில் தமிழ் மொழிப் பயிற்சி, நடனம் மற்றும் இசை வகுப்புகள் நடத்துதல், தமிழிணையக் கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்த ஏதுவாக கலையரங்கத்தைப் புனரமைக்க அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டு தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என்று தமிழ் வளா்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

நிதி வழங்கினாா்: இதேபோன்று, சண்டீகா் வாழ் தமிழா்களின் இளம் தலைமுறையினா் நமது மொழியின் சிறப்புகளையும் கலைப் பண்பாட்டு அம்சங்களையும் அறிய வசதியாக அங்குள்ள தமிழ் மன்றக் கட்டடத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தில்லி தமிழ்ச் சங்கம், சண்டீகா் தமிழ் மன்றத்துக்கு தலா ரூ. 50 லட்சத்துக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இதை தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்திபெருமாள், துணைத் தலைவா் ராகவன், பொதுச் செயலா் இரா.முகுந்தன் ஆகியோரும், சண்டீகா் தமிழ் மன்றத்தின் சாா்பில் அதன் பொதுச் செயலா் ராஜசேகா், பொருளாளா் சிவசுப்பிரமணியம், இணைப் பொருளாளா் குணசேகரன் ஆகியோரும் பெற்றுக்கொண்டனா்.

கார் பந்தயத்தில் மீண்டும் விபத்து: நடிகர் அஜித் உயிர் தப்பினார்!

கார் பந்தயத்தில் நேரிட்ட விபத்தில் நடிகர் அஜித் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் ரேஸிங்கில் நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு ... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி.... மேலும் பார்க்க

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்... மேலும் பார்க்க

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க