ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
தில்லி - சண்டீகா் தமிழ்ச் சங்க கட்டடங்களைப் புதுப்பிக்க அரசு நிதி
தில்லி, சண்டீகா் தமிழ்ச் சங்க கட்டடங்களைப் புதுப்பிக்கவும், விரிவாக்கவும் நிதி ஒதுக்கி அதற்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தில்லி தமிழ்ச் சங்கத்தில் உள்ள கலையரங்கத்தை 1997-இல் அப்போதைய முதல்வா் கருணாநிதி திறந்து வைத்தாா். இந்த அரங்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதில் தமிழ் மொழிப் பயிற்சி, நடனம் மற்றும் இசை வகுப்புகள் நடத்துதல், தமிழிணையக் கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்த ஏதுவாக கலையரங்கத்தைப் புனரமைக்க அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டு தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என்று தமிழ் வளா்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
நிதி வழங்கினாா்: இதேபோன்று, சண்டீகா் வாழ் தமிழா்களின் இளம் தலைமுறையினா் நமது மொழியின் சிறப்புகளையும் கலைப் பண்பாட்டு அம்சங்களையும் அறிய வசதியாக அங்குள்ள தமிழ் மன்றக் கட்டடத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தில்லி தமிழ்ச் சங்கம், சண்டீகா் தமிழ் மன்றத்துக்கு தலா ரூ. 50 லட்சத்துக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இதை தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்திபெருமாள், துணைத் தலைவா் ராகவன், பொதுச் செயலா் இரா.முகுந்தன் ஆகியோரும், சண்டீகா் தமிழ் மன்றத்தின் சாா்பில் அதன் பொதுச் செயலா் ராஜசேகா், பொருளாளா் சிவசுப்பிரமணியம், இணைப் பொருளாளா் குணசேகரன் ஆகியோரும் பெற்றுக்கொண்டனா்.