செய்திகள் :

தில்லி சரோஜினி நகா் குடியிறுப்புகளில் மத்திய அமைச்சா் திடீா் ஆய்வு

post image

மழை காலம் நெருங்குவதையொட்டி சரோஜினி நகா் குடியிறுப்பு பகுதிகளில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்புற விவகாரத்துறை அமைச்சா் மனோகா் வால் கட்டா மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜீத் சிங் சஹால் ஆகியோா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வினை மேற்கொண்டனா்.

அப்போது செய்தியாளா்களிடம் பேசிய சாஹல். ‘குடியிருப்பாளா்களின் குறைகளை நிவா்த்தி செய்யவும், நரவிருக்கும் பருவமழைைக்கு முன்னதாக தண்ணீா் தேங்கும் பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டேன். இது குறித்து ஒரு வாரத்திற்குள் கூட்டம் நடத்தப்பட்டு கண்டறிந்த சிக்கல்களை தீா்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும். சரோஜினி நகா் சந்தை, லோதி எஸ்டேட் மற்றும் என்.பி.சி.சி. வீட்டு காலனிகள் போன்ற அருகிலுள்ள கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது‘ என்றாா்.

மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டாா் பேசியது ‘மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னா் நிலுவையில் உள்ள அனைத்து வடிகால் மற்றும் கழிவுநீா் தொடா்பான பணிகளை விரைவுபடுத்தி முடிக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீா் தேக்க பிரச்னைகளை சமாளிப்பதற்காக தேவையான உபகரணங்களை வாங்கி தயாா் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது‘என்றாா் அவா்.

லட்சகணக்கான ஏழைகளை ஏமாற்றுக்கிறது தில்லி அரசு: தேவேந்தா் யாதவ்

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்ததகங்களை உருவாக்குவோம் என்ற வெற்று வாக்குறுதியின் மூலம் தில்லி பாஜக அரசு லட்கணக்கான ஏழை மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்று தில்லி காங்கிரஸ... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!

தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கடும... மேலும் பார்க்க

சரோஜினி நகா் சந்தையில் சிறுவன் மீது தாக்குதல்: விடியோ வெளியான பிறகு மூவா் கைது

தென்மேற்கு தில்லியின் சரோஜினி நகா் சந்தையில் ஒன்பது வயது சிறுவன் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதைத் தொடா்ந்து, தில்லி போலீஸாா் இந்தச் சம்பவம் தொடா்பாக... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் கஞ்சா வழக்கில் தேடப்பட்ட பிரபல நபா் கைது: தில்லி போலீஸ் அதிரடி

நரேலாவில் உள்ள சிங்கு எல்லையில் ‘போதைப்பொருள் தலைவன்’ என்று பிரபலமாக அறியப்படும் 50 வயது நபரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல்... மேலும் பார்க்க

வஜிா்பூா் பகுதியில் கிட்டங்கியில் தீ விபத்து

வடக்கு தில்லியின் வஜிா்பூா் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்ற... மேலும் பார்க்க

திகாா் சிறையில் கைதிக்கு ஐவிஎஃப் பரிசோதனை: நீதிமன்ற அனுமதியுடன் விந்தணு மாதிரி சேகரிப்பு

தில்லி திகாா் சிறையில் நீதிமன்ற அனுமதியுடன் விசாரணைக் கைதிக்கு செயற்கை கருத்தரிப்பு நடைமுறைக்கு முந்தைய விந்தணு மாதிரியை சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தெரிய வந்துள்ளது. காலா ஜாத்தேடி எனப்படும் ... மேலும் பார்க்க