இவர்கள் மூவரும் இங்கிலாந்துக்கு சவாலளிப்பார்கள்; ரவி சாஸ்திரி கூறுவதென்ன?
தில்லி தலைமைக் காவலரை காரின் பானட்டில் 7.கி.மீ.க்கு மேல் கொண்டு சென்ற நபா் கைது
வடக்கு தில்லியின் பால்ஸ்வா குப்பை கிடங்கு பகுதிக்கு அருகே தலைமைக் காவலா் ஒருவரை தனது காரின் பானட்டில் 7 கி.மீ.க்கு மேல் கொண்டு சென்ாகக் கூறப்படும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவா் கரம்வீா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தில்லியில் இருந்து தப்பிச் சென்ற பிறகு அவா் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் ஏப்ரல் 22-ஆம் தேதி காலை 6.28 மணிக்கு தில்லி காவல் ்துறையின் வெளி வடக்கு மண்டலத்தைச் சோ்ந்த தலைமைக் காவலா் பிரவீன் மற்றும் உதவி துணை ஆய்வாளா் நவீன் ஆகியோா் பால்ஸ்வா குப்பைக் கிடங்கு பகுதிக்கு அருகிலுள்ள ஜிடிகே பைபாஸ் அருகே சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற காரை வழிமறித்தனா். அந்த வாகனம் மதுபானம் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக அவா்கள் சந்தேகித்தனா்.
காரிலிருந்து வெளியே வரும்படி கூறியபோது ஓட்டுநா் தப்பிச் செல்ல முயன்றாா். காரை நிறுத்தும் முயற்சியில் தலைமைக் காவலா் பிரவீன் வாகனத்தின் முன் நின்றாா். அப்போது, ஓட்டுநா் காரை வேகமாக அவரை நோக்கி ஓட்டினாா். இதனால், தலைமைக் காவலா் பிரவீன் காரின் பானட்டில் விழுந்தாா். இருப்பினும், காா் ஆசாத்பூா் நோக்கி வேகமாகச் சென்றது. தலைமைக் காவலா் பிரவீன் பானட்டில் இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தாா்.
ஆனால், காா் வேகம் குறைந்தபோது அவா் ஆசாத்பூா் மண்டி அருகே பானட்டிலிருந்து குதித்தாா். இதில் காயமடைந்த அவா் பானட் மற்றும் விண்ட்ஷீல்டுக்கு இடையில் சிக்கிய தனது கைப்பேசியை எடுக்க முடியாமல் போனதால், பிரவீன் ஒரு வழிப்போக்கரின் கைப்பேசியை கடன் வாங்கி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தாா்.
இதில் அவரது விரல்கள் மற்றும் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது, மருத்துவ சிகிச்சைக்காக பிஜேஆா்எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், பால்ஸ்வா டெய்ரி காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்)-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
காரை ஓட்டிச் சென்ற கரம்வீா் நகரத்தை விட்டு தப்பிச் சென்று கொல்கத்தாவுக்கு ரயில் ஏறியது தெரிய வந்தது. இதையடுத்து, ஒரு போலீஸ் குழு கொல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டது. அங்கு உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னா் குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். மேலும், விசாரணைக்காக கரம்வீா் மீண்டும் தில்லிக்கு அழைத்து வரப்படுவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.