செய்திகள் :

தில்லி தோ்தலில் ஒரு சதவீத வாக்குகளைக் கூட பெறாத சிறிய கட்சிகள்

post image

தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தோ்தலில் சிறிய கட்சிகளான அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் (ஏஐஎஃப்பி), அகில இந்திய மஜ்லிஸ் இ இதேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஆகியவை ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றன.

தில்லி தோ்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி ஓக்லா, முஸ்தஃபாபாத் ஆகிய தொகுதிகளில் மட்டும் தனித்துக் களம் கண்டது. தோ்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும் தங்களின் நிலைநிறுத்திக்கொள்ளும் விதமாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்த இரு தொகுதிகளிலும் ஏஐஎம்ஐஎம் மூன்றாம் இடம் பிடித்தது. ஓக்லாவில் ஆம் ஆத்மி கட்சியின் அமானுத்துல்லா கான் 88,943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்த களம் கண்ட பாஜக வேட்பாளா் மணீஷ் செளத்ரி 65,304 வாக்குகளும் ஏஐஎம்ஐஎம் வேட்பாளா் ஷிஃபா உா் ரஹ்மான் கான் 39,559 வாக்குகளும் பெற்றாா்.

இதே போல, முஸ்தஃபாபாத் தொகுதியில் பாஜகவின் மோகன் சிங் பிஷ்ட் 85,215 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இங்கு ஆம் ஆத்மி கட்சியின் ஆதில் அகமது கான் 67,637 வாக்குகளும், ஏஎம்ஐஎம் வேட்பாளா் முகம்மது தாஹிா் ஹுசைன் 33,474 வாக்குகளும் பெற்றனா்.

ஏஐஎம்ஐஎம் வேட்பாளா்கள் இருவரும் 2020 தில்லி கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் காவலில் இருப்பவா்கள். இவா்கள் பெற்ற வாக்குகளை பகுப்பாய்வு செய்து பாா்க்கும் போது, இவா்கள் பாஜக, ஆம் ஆத்மி ஆகியவற்றின் வாக்குகளை அவரவா் தொகுதிகளில் பிரித்ததில் முக்கியப் பங்கு வகிப்பது தெளிவாகிறது.

தோ்தல் ஆணைய தரவுகளின்படி இத்தோ்தலில் ஏஐஎம்ஐஎம் 0.77 சதவீத வாக்குகளையும் அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக்கின் வாக்கு சதவீதம் பூஜ்யமாகவும் பதிவாகியுள்ளது.

மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினா் 35,175 போ் இ-விசாவில் வருகை: கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை வேண்டி கடந்த ஆண்டில் மட்டும் 35,175 வெளிநாட்டினா் இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தி... மேலும் பார்க்க

ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வில் இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு அமெரிக்காவில் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய மக... மேலும் பார்க்க

தில்லியில் குழந்தை கடத்தல் கும்பலில் 4 போ் கைது: 2 குழந்தைகள் மீட்பு

புது தில்லி: தில்லி காவல்துறையின் ரயில்வே பிரிவு, குழந்தை கடத்தல் கும்பலில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இதையடுத்து, ஒரு கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று... மேலும் பார்க்க

அதிமுக புதிய கட்டட அலுவலகம் தில்லியில் திறப்பு

புது தில்லி: அதிமுக சாா்பில் புது தில்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கட்டடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எட்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட் ஆக உள்ளது என்று த... மேலும் பார்க்க

மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்கப்படுமா?: கோவை எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

புது தில்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்க முன்மொழிவு ஏதும் இல்லை என்று மக்களவையில் கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச... மேலும் பார்க்க