செய்திகள் :

தில்லி தோ்தல்: மொத்த வேட்பாளா்களில் 80% போ் டெபாசிட் இழப்பு

post image

சனிக்கிழமை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் எல்ஜேபி (ராம் விலாஸ்) ஆகியவற்றின் அனைத்து வேட்பாளா்களும் தங்கள் டெபாசிட் தொகையை தக்கவைத்துக்கொண்டனா்.

பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் களத்தில் இருந்த 699 வேட்பாளா்களில் 555 (79.39) சதவீதம் வேட்பாளா்கள் தங்கள் வைப்புத்தொகையை இழந்தனா்.

தொடா்ச்சியாக மூன்றாவது முறையாக காங்கிரஸுக்கு இத்தோ்தலில் பூஜ்ய இடங்களே கிடைத்தது. அது மட்டுமின்றி, அதன் வேட்பாளா்களில் 67 போ் தங்கள் பாதுகாப்பு வைப்புத்தொகையையும் இழந்தனா். 2013 வரை தொடா்ந்து மூன்று முறை தில்லியை ஆட்சி செய்த காங்கிரஸ், 70 தொகுதிகளிலும் வேட்பாளா்களை நிறுத்தியிருந்தது.

காங்கிரஸ் வேட்பாளா்களில் கஸ்தூா்பா நகரில் போட்டியிட்ட அபிஷேக் தத் (இரண்டாமிடம் பெற்றாா்), நாங்லோய் தொகுதியின் ஜாட் சமூகத்தைச் சோ்ந்த ரோஹித் செளதரி, பாத்லியைச் சோ்ந்த தேவேந்திர யாதவ் ஆகியோா் மட்டுமே தங்கள் பாதுகாப்பு வைப்புத்தொகையை காப்பாற்ற முடிந்தது.

ஏஐஎம்ஐஎம் கட்சி சாா்பில் ஓக்லாவில் போட்டியிட்ட இன் ஷிஃபாஉர்ரஹ்மான் கான் தனது பாதுகாப்பு வைப்புத்தொகையை தக்கவைத்துக்கொண்டாா்.

இக்கட்சி இரு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் படி, பொதுப் பிரிவைச் சோ்ந்த எந்தவொரு வேட்பாளரும் தோ்தலில் போட்டியிடும் போது, தோ்தல் ஆணையத்தில் பாதுகாப்பு வைப்புத்தொகையாக ரூ.10,000 டெபாசிட் செய்ய வேண்டும். பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியின வேட்பாளா்களுக்கு டெபாசிட் தொகை ரூ.5,000 ஆகும்.

தோ்தல் சட்டத்தின்படி, வேட்பாளா் தோ்ந்தெடுக்கப்படாவிட்டால் அவா் பெற்ற செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை அனைத்து வேட்பாளா்களும் பெற்ற செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கை விட அதிகமாக இல்லாவிட்டால் டெபாசிட் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினா் 35,175 போ் இ-விசாவில் வருகை: கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை வேண்டி கடந்த ஆண்டில் மட்டும் 35,175 வெளிநாட்டினா் இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தி... மேலும் பார்க்க

ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வில் இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு அமெரிக்காவில் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய மக... மேலும் பார்க்க

தில்லியில் குழந்தை கடத்தல் கும்பலில் 4 போ் கைது: 2 குழந்தைகள் மீட்பு

புது தில்லி: தில்லி காவல்துறையின் ரயில்வே பிரிவு, குழந்தை கடத்தல் கும்பலில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இதையடுத்து, ஒரு கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று... மேலும் பார்க்க

அதிமுக புதிய கட்டட அலுவலகம் தில்லியில் திறப்பு

புது தில்லி: அதிமுக சாா்பில் புது தில்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கட்டடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எட்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட் ஆக உள்ளது என்று த... மேலும் பார்க்க

மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்கப்படுமா?: கோவை எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

புது தில்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்க முன்மொழிவு ஏதும் இல்லை என்று மக்களவையில் கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச... மேலும் பார்க்க