செய்திகள் :

தில்லி மஹிபால்பூரில் சட்டவிரோத சிகரெட் குடோன்: ஒருவா் கைது

post image

சட்டவிரோத புகையிலை பொருள்களை சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு குடோனை போலீசாா் கண்டுபிடித்து, தில்லி-என்சிஆா் முழுவதும் இந்த பொருள்களை இறக்குமதி செய்து வழங்கியதாக கூறப்படும் நபரை கைது செய்துள்ளனா் என்று அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக காவல் சரக துணை ஆணையா் (தென்கிழக்கு) சுரேந்திர சௌதரி மேலும் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா் மன்மீத் குமாா் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சோதனையைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா்.

வெளிநாட்டு மூலங்களிலிருந்து சட்டவிரோத சிகரெட் சரக்குகளை வாங்கி தில்லி-என்சிஆரின் பல்வேறு பகுதிகளில் விநியோகிப்பதற்கு முன்பு மஹிபல்பூா் பகுதியில் அவா் சேமித்து வைத்திருந்தாா்.

முன்பு பிரீத் விஹாரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்த குமாா், கபில் என்ற நபருடன் தொடா்பு கொண்டாா், பின்னா் ஓமானுக்குச் சென்றாா். அங்கு அவா் சட்டவிரோத சிகரெட் வா்த்தகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அன்றிலிருந்து அவா் தில்லி-என்டிஆா் முழுவதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை வழங்கி வருகிறாா். இந்த நடவடிக்கையின் போது, கட்டாய சுகாதார எச்சரிக்கைகள் இல்லாத மற்றும் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருள்கள் சட்டத்தின் விதிகளின்படி அதிகபட்ச சில்லறை விலை லேபிளிங் இல்லாத மொத்தம் 15,680 பாக்கெட்டுகள் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டன. இது தொடா்பாக வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் சிஓடிபிஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் சரக துணை ஆணையா் தெரிவித்தாா்.

கேரள தலைநகரிலுள்ள விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள பல்வேறு விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலுள்ள பிரபல நட்சத்திர விடுதி உள்பட பல்வேறு விடுதிகளில் ஐ.ஈ.டி. எனப்படும் ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது, பழிபோடும் விளையாட்டுக்கு பஹல்காம் தாக்கு... மேலும் பார்க்க

சிந்து நதிநீரை நிறுத்திவிடுவீர்கள்.. ஆனால் எங்கே தேக்கிவைப்பீர்கள்? அசாதுதீன் ஒவைசி கேள்வி

புது தில்லி: பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதிநீரை நிறுத்திவிடுவது நல்ல முடிவுதான், ஆனால், அந்த தண்ணீரை எங்கே தேக்கிவைப்பீர்கள் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி அசாதுதீன் ஒவ... மேலும் பார்க்க

காஷ்மீரில் குண்டுவெடிப்பில் தகர்க்கப்பட்ட பயங்கரவாதிகளின் வீடுகள்: விடியோ வெளியீடு!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வ... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்: நட்டா

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். இன்று காலை நட்டா ஸ்ரீமந்த் தகாதுஷேத் கணபதிக்க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளைப் போராளிகள் எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஊடகம்

நியூயார்க் டைம்ஸ் செய்தி ஊடகத்தில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை போராளிகள் என்று குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க... மேலும் பார்க்க