செய்திகள் :

தில்லி முதல்வர் பர்வேஷ்?

post image

புதுதில்லி: புதுதில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர் பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குககள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புது தில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான கேஜரிவால், பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்துள்ள நிலையில், பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

முதல்வர் பதவிக்கான போட்டியில் கைலாஷ் கெலாட், கபிஸ் மிஸ்ரா உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான கேஜரிவால் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்துள்ள நிலையில், ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பாஜக வேட்பாளர் தர்விந்தர் சிங் மர்வாவிடம் தோல்வி அடைந்துள்ளார்.

தனது தோல்வியை ஒப்புக்கொள்வதாக சிசோடியா தெரிவித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

இதனிடையே, கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட தில்லி முதல்வர் அதிஷி 52,154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி 989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வமாக அறிவிப்புக்கு பின்னரே வாக்குகள் வித்தியாசம் தெரியவரும்.

அதிஷி வெற்றி! கேஜரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி!

பாஜக ஆட்சி

பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தில்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி. வெற்றியை வழங்கிய தில்லி மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்த பர்வேஷ், மோடியிந் தொலைநோக்குப் பார்வையை தில்லிக்கு கொண்டு வரும் என பர்வேஷ் கூறினார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய்த தில்லி மக்கள், பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த நிலையில் 2025 பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தங்களது பார்வையைத் திருப்பியுள்ளனர்.

அமைதியை நிலைநாட்ட அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது: மணிப்பூர் முதல்வர்

வடக்கிழக்கு மாநிலமான மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தனது தலைமையிலான அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருவதாக அம்மாநில முதல்வர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.அம்மாநிலத்தில் அசாம் ரைப்பில்ஸ... மேலும் பார்க்க

ரூ.7 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்! 3 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.7 கோடி அளவிலான தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார். அசாமின் ஸ்ரீபூமி மாவட்டத... மேலும் பார்க்க

சீன நிலச்சரிவில் 30 பேர் மாயம்! தேடும் பணி தீவிரம்!

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மாயமானோரைத் தேடும் பணி அந்நாட்டு மீட்புப் படையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் இன்று (பிப்.8)... மேலும் பார்க்க

15 தலிபான் தீவிரவாதிகள் கைது!

பாகிஸ்தானில் 15 தலிபான் தீவிரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத் தடுப்புப் படையினர் கிடைக்கப்பெற்ற 143 ரகசி... மேலும் பார்க்க

அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷியப் பாடகர் மர்ம மரணம்!

ரஷிய அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த அந்நாட்டு பாடகரின் வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.ரஷியாவின் ஊரால்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த போர் எதிர்பாளரும... மேலும் பார்க்க

நியூயார்க்: 5 நாள்களுக்கு மூடப்படும் கோழிப் பண்ணைகள்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சலை கட்டுபடுத்த அங்குள்ள நகரங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கோழிப் பண்ணைகள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூயார்க் நகரத்தின் தி குயின... மேலும் பார்க்க