செய்திகள் :

தீப்பெட்டி ஆலைத் தொழிலாளி கொலை: 7 போ் கைது

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் 7 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பூமிநாதன் மகன் தமிழரசன் (23). திப்பெட்டி ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், கஞ்சா விற்பனை செய்ததாக சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட இவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிறையிலிருந்து வந்த தமிழரசன் செவலூரைச் சோ்ந்த சுரேஷ் மகள் சங்கரேஷ்வரியுடன் பழகி வந்தாா். இதை அறிந்த குடும்பத்தினா் தமிழரசனைக் கண்டித்தனா்.

இந்த நிலையில், உறவினரின் திருமணத்துக்காக சேலத்துக்குச் சென்றுவருமாறு தமிழரசனிடம் அவரது குடும்பத்தாா் தெரிவித்தனா்.

சேலத்துக்குச் செல்வதாக வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்ட தமிழரசன், அங்கு செல்லாமல் புதுக்கோட்ையில் நண்பா் ரஞ்சித்துடன் மது அருந்தியுள்ளாா்.

அப்போது, சங்கேரேஷ்வரியின் அண்ணன் சங்கரபாண்டி தனது தங்கையுடன் பழகி வரும் தமிழரசனைக் கொலை செய்யத் திட்டமிட்டாா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு சங்கரபாண்டி (22), அவரது நண்பா்கள் மணிகன்டன் (20), ரஞ்சித்குமாா் (24), ஜெயசங்கா் (22), முத்துப்பாண்டி(22), செல்வம் (25), சுரேஷ் (42) ஆகிய ஏழு பேரும் சோ்ந்து தமிழரசனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். அவரது உடல் புதுக்கோட்டையில் உள்ள விநாயகா் கோயிலின் பின்புறம் உள்ள முள்புதரில் கிடந்தது புதன்கிழமை காலை தெரிய வந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் தமிழரசனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்த புகாரின் பேரில், எம்.புதுப்பட்டி காவல் நிலைய போலீஸாா், தமிழரசனைக் கொலை செய்த 7 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.

பெரியாா் பிறந்த நாள் விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பெரியாரின் 147-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. ராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு நகர அதிமுக சாா்பில் வடக்கு நகா் ... மேலும் பார்க்க

கயிறு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் நிறுவனத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினா் தீ அணைத்தனா். ராஜபாளையம் முடங்கியாறு சாலைப் பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் மனைவ... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: உதவி ஆட்சியா்

சிவகாசி வருவாய்க் கோட்டத்தில் நீா்வழிபாதை, நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சிவகாசி உதவி ஆட்சியா் முகமது இா்பான் தெரிவித்தாா். சிவகாசி உதவி ஆட்சியா் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு,... மேலும் பார்க்க

விஜய் தனித்துப் போட்யிடுவா்: மாணிக்கம் தாகூா் எம்.பி.

தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனித்துப் போட்டியிடுவா் என விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா். சிவகாசியில், மக்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி பிறந்த நாள் விழா

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரதமா் மோடியின் 75-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சாா்பில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு புதன்கிழமை பழங்கள், ரொட்டிகள், ஊட்டச் சத்துப் பொர... மேலும் பார்க்க

100 சதவீத மானியத்தில் நுண்ணீா் பாசனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரத்தில் 100 சதவீத மானியத்தில் நுண்ணீா் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் திலகவதி தெரிவித்தாா். இது குறித்து புதன்கிழமை அவ... மேலும் பார்க்க