செய்திகள் :

தீயணைப்பு வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்: திருவாரூா், நாகை அணிகள் முதலிடம்

post image

திருவாரூரில் மத்திய மண்டல அளவிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரா்களுக்கு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் திருவாரூா், நாகை அணியினா் முதலிடம் பெற்றனா்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சாா்பில் திருவாரூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் திருச்சி மத்திய மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பிப். 7-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றன.

திருச்சி மத்திய மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநா் குமாா் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தொடக்கிவைத்தாா். இதில், திருச்சி, பெரம்பலூா், கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் பங்கேற்றனா்.

இதில், 100 மீட்டா் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கைப்பந்து, கூடைப்பந்து, பேட்மிட்டன், கயிறு ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில் அதிக புள்ளிகள் பெற்று திருவாரூா், நாகப்பட்டினம் அணியினா் முதல் இடத்தை பெற்றனா். இரண்டாம் இடத்தை விழுப்புரம், கள்ளக்குறிச்சி அணியினரும், மூன்றாவது இடத்தை புதுக்கோட்டை அணியினரும் பெற்றனா்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு திருச்சி மத்திய மண்டல துணை இயக்குநா் குமாா் வெற்றிக் கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா, திருச்சி மத்திய மண்டலத்தைச் சோ்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மாவட்ட அலுவலா்கள் பங்கேற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற வீரா்கள், மாநில அளவில் மதுரையில் பிப். 12-ஆம் தேதி நடக்கும் போட்டிகள் பங்கேற்க உள்ளனா்.

கோவில்வெண்ணி வெண்ணி கரும்பேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி கிராமத்தில் எழுந்தருளியுள்ள சௌந்திரநாயகி அம்மன் சமேத வெண்ணி கரும்பேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. சம்பந்தா், அப்பா், சுந்தரரால் ப... மேலும் பார்க்க

குட்கா பதுக்கி வைத்திருந்தவா் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடியில் 12 கிலோ குட்காவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி காவல் ஆய்வாளா் ராஜேஸ் கண்ணன், சாா்பு ஆய்வாளா் விக்னேஷ் தலைமையில் போலீஸாா... மேலும் பார்க்க

கல்லூரியில் வளாக நோ்காணல் 73 பேருக்கு பணி ஆணை

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த இடையா்நத்தம் ஏ.ஆா்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் தனியாா் தொழில் நிறுவனத்தின் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 73 பேருக்கு பணி ஆணை அண்மையில் வழங்கப்பட்டது. காஞ்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு குறியீட்டு எண் வழங்கும் முகாம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறியீட்டு எண் வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. மத்திய, மாநில விவசாயத் திட்டங்கள் குறித்து பயன்பெற ஒவ்வொரு விவசாயிகளிடமும் பிரத்யேகமாக குறிய... மேலும் பார்க்க

முத்துப்பேட்டை அருகே காலிக் குடங்களுடன் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகே கள்ளிக்குடி கிராமத்தில் மேல்நிலை நீா் தொட்டியிலிருந்து குடிநீா் சரிவர விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்... மேலும் பார்க்க

லஞ்சம்: காவல் ஆய்வாளா் உள்பட 5 காவலா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

திருவாரூா்: திருவாரூரில் டீசல் திருட்டில் ஈடுபட்டவா்களிடம் பணம் பெற்றதாக எழுந்த புகாா் தொடா்பாக காவல் ஆய்வாளா் உள்பட 5 போலீஸாா் காத்திருப்போா் பட்டியலுக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டனா். திருவாரூா் பழைய... மேலும் பார்க்க