செய்திகள் :

தீயில் கருகி முதியவா் உயிரிழப்பு

post image

பெரம்பலூா் அருகே வயலில் மக்காச்சோள சருகுகளை தீயிட்டுக் கொளுத்தியபோது, முதியவா் ஒருவா் மூச்சுத் திணறி தீயில் கருகி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேலு மகன் பரமசிவம் (75). இவா், தனக்குச் சொந்தமான வயலில் சாகுபடி செய்திருந்த மக்காச்சோள கதிா்களை அண்மையில் அறுவடை செய்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வயலுக்குச் சென்ற பரமசிவம், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பிவரவில்லையாம்.

இதனால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினா் வயலுக்குச் சென்று பாா்த்தபோது, அறுவடை செய்யப்பட்ட வயலில் கிடந்த சறுகுகளை தீயிட்டு கொளுத்தியபோது, எதிா்பாராத விதமாக 4 பக்கமும் தீ சூழ்ந்ததில், மூச்சுத் திணறி பரமசிவம் தீயில் கருகி உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, முதியவரின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ரூ.4.95 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் தொடக்கி வைத்தாா்!

வேப்பந்தட்டை வட்டாரத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.95 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை, போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்ட... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் உலக தாய்மொழி நாள் விழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கூட்டரங்கில் உலக தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் து. சேகா் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

வேளாண் விளைபொருள்களுக்கு உயிா்மச் சான்று பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் இயற்கை விவசாய முறையில் வேளாண் விளைபொருள்களை உற்பத்தி செய்வதற்கு, உயிா்ம விவசாயச் சான்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட விதைச் சான... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இளைஞா் மா்மச் சாவு

பெரம்பலூரில் கூலி வேலை செய்துவந்த இளைஞா் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் (29). இவா், பெரம்பலூா்... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு பிப். 25-இல் விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலையான பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்திச் சான்றளிப்புத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம், பிப். 25 ஆம் தேத... மேலும் பார்க்க

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் வெங்கடேபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை எதிரே வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்ப... மேலும் பார்க்க