செய்திகள் :

தீர்வு காண்பதில் அல்ல, வெற்று முழக்கங்களின் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார் மோடி: ராகுல்

post image

பிரதமர் நரேந்திர மோடி முழக்கங்களின் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளாரே தவிர தீர்வு காண்பதில் அல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

'மேக் இன் இந்தியா' தொழிற்சாலை ஏற்றத்தை உறுதியளித்தது. அப்படியானால் உற்பத்தி ஏன் மிகக் குறைந்த அளவில் உள்ளது. இளைஞர்களின் வேலையின்மை அதிகளவில் உள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதிகள் ஏன் இரட்டிப்பாகியுள்ளன? மோடி தீர்வுகளில் அல்ல, முழக்கங்களின் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

2014 முதல் உற்பத்தி நமது பொருளாதாரத்தில் 14 சதவீதமாகக் குறைந்துள்ளது. மோடியிடம் புதிதாக எந்த யோசனைகளும் இல்லை என சரணடைந்துவிட்டார். மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட பிஎஸ்ஐ திட்டம், தற்போது அமைதியாகத் திரும்பப் பெறப்படுகிறது.

நேர்மையான சீர்திருத்தங்கள் மற்றும் நிதி ஆதரவு மூலம் லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அடிப்படை மாற்றம் இந்தியாவுக்குத் தேவை. மற்றவர்களுக்குச் சந்தையாக இருப்பதை நாம் நிறுத்த வேண்டும். நாம் கட்டமைக்கவில்லை என்றால், வாங்குபவர்களிடமிருந்து வாங்குவதைத் தொடர்வோம். நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

ராகுல் காந்தி தில்லியில் நேரு பிளேஸில் மொபைல் பழுதுபார்க்கும் ஒருவரை சந்தித்து, அவரது உரையாடலின் விடியோவையும் இணைந்துள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்படுவதற்கும், இந்தியாவில் ஏற்றுமதி செய்வதற்கும் இடையே வேறுபாடு உள்ளது. உண்மை அப்பட்டமானது. ஒன்றுகூடி இறக்குமதி செய்கிறோமே தவிர, எதையும் உருவாக்குவதில்லை.

சீனா லாபம் ஈட்டுகிறது. சீனா உலகின் மின்னணு சந்தை போன்று வேறு எங்கும் மின்னணு சந்தை இல்லை என்றளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவில் இறக்குமதி செய்கிறோமே தவிர வேறேதும் செய்வதில்லை. ஐபோன்களை உருவாக்கத் தொடங்குகள், இது முற்றிலும் மாறுபட்ட பந்து விளையாட்டு என்று அவர் விடியோவில் கூறினார்.

இந்தியச் சமூகம் எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கிறது, இந்தியச் சமூகம் எவ்வாறு மரியாதையைப் பகிர்ந்தளிக்கிறது என்பதை நாம் சரியாகக் காட்ட வேண்டும். சமூகத்தில் உள்ள பல்வேறு சாதிகளுக்கு விகிதாசார "பங்கு" உள்ளதா என்பதைக் கண்டறிய, நாடு தழுவிய சாதி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பிரச்னையை ராகுல் காந்தியும் காங்கிரஸும் எழுப்பியுள்ளனர் என்று அவர் கூறினார்.

அகமதாபாத் விமான விபத்து: 247 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 247 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் முக்கிய நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை: முதல்வர் ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தில் ஆலந்தி நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.புணே மாவட்டத்தில் உள்ள ஆலந்தியில் உள்ள பிரசித்திபெற்ற தியானேஷ்வரர் கோவிலி... மேலும் பார்க்க

திருப்பதியில் தீ விபத்து!

திருப்பதி கோவில் வளாகத்தில் இன்று(ஜூன் 21) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திருப்பதியில் கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட நிலையில், சுமார் 24 மணிநேரம் வரை ப... மேலும் பார்க்க

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது: ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம்!

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டு ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார். சா்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர பிரதேசத்த... மேலும் பார்க்க

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்கும்: ஐசிஎம்ஆர் புது முயற்சி!

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்க ஏதுவாக ஐசிஎம்ஆர் புது முயற்சியை எடுத்துள்ளது. ஐசிஎம்ஆர் கீழ் செயல்படும் மும்பையில் உள்ள தேசிய இம்யூனோ ஹீமெடாலஜி நிறுவனம், நாட்டிலேயே முதல்முறையாக ‘அரிய வகை இரத்தப் ப... மேலும் பார்க்க

ஓய்வூதியம் பற்றி நல்ல செய்தியைத் தெரிவித்த நிதிஷ் குமார்!

பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளார் அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார். பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையி... மேலும் பார்க்க