செய்திகள் :

துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை பா.ஜ.க தேர்வு செய்ய காரணம் என்ன?

post image

துணை ஜனாதிபதி தேர்தல்

துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அப்பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று கூடிய பா.ஜ.க தலைமை கூட்டத்தில், துணை ஜனாதிபதி பதவி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சி.பி.ராதாகிருஷ்ணனை பா.ஜ.க தலைமை தேர்ந்தெடுப்பதற்கு பல்வேறு முக்கிய காரணங்கள் இருப்பதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

CP Radhakrishnan
CP Radhakrishnan

சி.பி.ராதாகிருஷ்ணன் செய்த பணிகள்

மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட், தெலங்கானா, பாண்டிச்சேரிகளில் ஆளுநராக இருந்துள்ளார்.

ஜார்க்கண்டில் ஆளுநராக இருந்த போது குறுகிய காலத்தில் மாநிலத்தில் உள்ள 24 மாவட்டத்திற்கும் சென்று மக்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து பேசியுள்ளார். அதேசமயம் எதிர்க்கட்சிகள் சொல்வதையும் காது கொடுத்து கேட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் செய்த பணிகள்

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதிதான் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராக பதவியேற்றார். அதன் பிறகு ராஜ்பவனில் அமைதியாக இருக்காமல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் பிரதிநிதிகளையும், அரசு அதிகாரிகளையும், தொழிலதிபர்களையும் சந்தித்து பேசினார்.

அதோடு சமுதாயத்தின் அடிமட்டத்தொண்டர்களைக்கூட சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

CP Radhakrishnan
CP Radhakrishnan

அவரை யார் நேரில் சென்று எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு சென்று கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கடந்த மாதம் நவிமும்பை தமிழ்ச்சங்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வனின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

அதோடு அனைவரையும் அரவணைத்து செல்வதில் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இருந்தார். தனது பதவிக்காலத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிகப்படியான எதிர்க்கட்சி குழுக்களை சந்தித்து பேசினார்.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை, நிதி மோசடி, சட்டமன்றத்தில் எழுப்பப்படும் பிரச்னை என எதுவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் சொல்லும் புகார்களை சி.பி.ராதாகிருஷ்ணன் மிகவும் பொறுமையுடன் காது கொடுத்து கேட்டார்.

அதோடு அவர்கள் கொடுக்கும் புகார்கள் மற்றும் தனக்கு வரக்கூடிய புகார்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

சட்டமேலவைக்கு நியமன உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான மாநில அரசின் கோரிக்கை நீண்ட நாள்களாக ஆளுநரிடம் கிடப்பில் இருந்தது. அதற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்தார்.

கறை படியாத கரங்கள்

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவார் ஆகியோரிடமும் இணக்கமான உறவை பேணினார்.

கறை படியாத கை, அனைத்து அரசியல் கட்சிகளையும் அரவணைத்து செல்லுதல் போன்ற காரணங்கள்தான் சி.பி.ராதாகிருஷ்ணனை இந்த உயரத்திற்கு கொண்டு சென்று இருப்பதாக பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

CP Radhakrishnan
CP Radhakrishnan

தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவரை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலைப்படுத்த வேண்டும் என்று விரும்பினார். அதற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் சரியான தேர்வு என்றும் பா.ஜ.கவினர் தெரிவித்தனர்.

சி.பி.ராதாகிருணனை கொண்டு திராவிட கட்சிகளுடன் இருக்கும் உறவை பலப்படுத்திக்கொள்ள முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி நினைப்பதாகவும் பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர்.
ஆளுநர் ஒருவர் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு சங்கர் தயாள் சர்மா 1987-ம் ஆண்டு ஆளுநராக இருந்தபோது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதே போன்று 2002-ம் ஆண்டு ஆளுநராக இருந்த பி.சி.அலெக்சாண்டர் பெயர் ஜனாதிபதி பதவிக்கு இறுதி செய்யப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு அந்த இடத்திற்கு அப்துல் கலாம் கொண்டு வரப்பட்டார்.

தமிழகத்தில் பாஜக வலுவாகுமா?

இது குறித்து அரசியல் நிபுணர்கள் தரப்பில் கூறுகையில், ''தற்போது சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி ஆக்குவதன் மூலம், அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அது தங்களுக்கு சாதகமாக அமையும் என்று பா.ஜ.க நம்புகிறது.

CP Radhakrishnan
CP Radhakrishnan

தமிழகத்தில் வலுவாக வேறூன்ற பா.ஜ.க எவ்வளவோ முயன்று பார்க்கிறது. ஆனால் பா.ஜ.கவின் எந்த முயற்சியும் பலனளிக்காமல் இருக்கிறது.

ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையை மாநில பா.ஜ.க தலைவராக்கினார்கள். ஆனால், அதிமுகவோடு கூட்டணி வைக்கவேண்டும் என்ற காரணத்திற்காக அவரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் திராவிட கட்சிகள் சொல்படி கேட்டு நடக்க வேண்டிய நிலையில் பா.ஜ.க உள்ளது" என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

``சென்னை மாநகராட்சி முழுதும் திமுக போலி வாக்காளர்களால் மட்டுமே வெற்றி பெறுகிறது'' -எடப்பாடி பழனிசாமி

வாக்காளர் பட்டியல் திருத்தம்‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளில் மக்களை சந்தித்தார். ... மேலும் பார்க்க

``கட்சியை கலைத்து விட்டு திமுகவில் இணைந்து விடலாம்'' - கம்யூனிஸ்ட் கட்சி மீது எடப்பாடி விமர்சனம்

அதிமுகவின் சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கின்ற பிரச்சார பயணத்தில் அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில்... மேலும் பார்க்க

``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரிக்கை

மகாராஷ்டிராவில் அக்டோபர் அல்லது நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் மும்பை மாநகராட்சியை எப்படியும் பிடித்துவிடவேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. இதற்காக ஏற்கெனவே தேர்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: எடப்பாடி பிரசாரத்தில் பிக்பாக்கெட்; கூட்டத்தில் பணத்தை இழந்த அதிமுகவினர் கவலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் எடப்பாடி பிரசாரம்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.இரண்டாம் கட்ட சுற... மேலும் பார்க்க

`மழை வெள்ளம் வந்து’ - காணாமல் போன 4,000 டன் நிலக்கரி குறித்து அமைச்சர் சொன்ன பகீர் பதில்

மேகாலயாவில் உள்ள டியன்கன் மற்றும் ராஜாஜு ஆகிய கிராமங்களில் இருந்த நிலக்கரி குடோனில் 4,000 டன் நிலக்கரியை சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலக்கரி சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்... மேலும் பார்க்க

மராத்தி பேசாதவர்களை அடித்து உதைக்கும் ராஜ் தாக்கரே கட்சி.. நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன்?

மராத்தி பேசாதவர்கள் மீது தாக்குதல்..மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தியில் பேச வேண்டும் என்று கூறி வருகிறார். இதற்காக அவரது கட்சி தொண்டர்கள்... மேலும் பார்க்க