செய்திகள் :

துணை வட்டாட்சியா் பணி: இடஒதுக்கீடு விவரம் வெளியீடு

post image

புதுவையில் துணை வட்டாட்சியா்கள் 30 போ் புதிதாக நியமிக்கப்பட விண்ணப்பங்கள் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதற்கான இட ஒதுக்கீடு விவரங்களும், வயது சலுகை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

துணை வட்டாட்சியா் பணி தோ்வுக்காக புதன்கிழமை (மே 28) முதல் ஜூன் 27-ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

30 துணை வட்டாட்சியா் பணியிடங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதாகவும், அதன்படி இடஒதுக்கீடு அல்லாத (யூஆா்) பிரிவுக்கு 12, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினா் (இடபிள்யூஎஸ்) 3, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் (எம்பிசி) 5, தாழ்த்தப்பட்டோா் (எஸ்சி) 5, இதர பிரிவினா் (ஓபிசி) 3, முஸ்லிம் (பிசிஎம்) 1, பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோா் 1 மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கூடுதலாக ஓரிடம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு சலுகையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோா், இதர பிரிவினா், முஸ்லீம் பிரிவு (பிசிஎம்) ஆகியோருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோருக்கு 5 ஆண்டுகளும், முன்னாள் ராணுவ வீரா்களுக்கு அவா்கள் பணி ஆண்டுகளுடன் கூடுதலாக 3 ஆண்டு, முக்கிய ராணுவப் பணிகளில் ஈடுபட்டவா்களுக்கு பொதுவாக 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோருக்கு 8 ஆண்டுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்களுக்கான விதிமுறைகள், தோ்வு வினா பாடமுறை மற்றும் இடஒதுக்கீடு சதவீதம் என பணியில் சேருவது குறித்த சட்ட விதிமுறைப்படியான விளக்கங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பங்கள் உள்ளிட்டவை குறித்த சந்தேகங்களுக்கு 0413-2299567 என்ற தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துண... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மா... மேலும் பார்க்க

கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா். புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்க 55-ஆம் ஆண்டு அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 1970-ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி சிஐடியுவின் அமைப... மேலும் பார்க்க

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க