செய்திகள் :

துணை வேந்தர்கள் மாநாட்டில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு!

post image

உதகையில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கவிருப்பதாக தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

தமிழக ஆளுநராக ஆா்.என்.ரவி 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து பல்கலைக்கழகங்களின் வேந்தா் என்ற அடிப்படையில் 2022-முதல் ஆண்டுதோறும் துணைவேந்தா்கள் மாநாட்டை உதகையில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ரவி நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், 4-வது ஆண்டாக ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்திருந்தது.

மேலும், தில்லியில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை நேரில் சந்தித்து சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க ஆளுநா் ரவி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், துணை வேந்தர்கள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாநாட்டை குடியரசுத் துணைத் தலைவர் துவக்கிவைப்பதை ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 48 மத்திய, மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியாா் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், பல்வேறு துறைகளின் நிபுணர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது ஆளுநா் ரவி குறித்த காலத்தில் முடிவெடுக்காமல் இருந்ததால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. அதில், இரண்டாவது முறையாக பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் அனுப்பியது சட்டத்துக்கு எதிரானது என்றும், அவ்வாறு அவா் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த 10 மசோதாக்களும் அவை சட்டப்பேரவையில் இருந்து ஆளுநருக்கு அனுப்பி வைத்த நாளில் இருந்தே ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிவித்து உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு ஏப். 8-இல் தீா்ப்பளித்தது. அவற்றில் பல்கலைக்கழக வேந்தா் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதாவும் அடங்கும்.

உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் ஆளுநரின் ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சட்ட மசோதாக்கள் சட்டமானதாக அரசிதழில் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதன் தொடா்ச்சியாக துணைவேந்தா்கள் மற்றும் பதிவாளா்களின் கூட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் சமீபத்தில் கூட்டினாா்.

இதனிடையே, வேந்தராக தொடர்வதாகவும், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே இல்லை என்றும் தெரிவித்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது துணை வேந்தர்களின் மாநாட்டை நடத்துகிறார்.

இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பும் கண்டனத்தையும் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் வெற்றி: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

நான் முதல்வர் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக அரசின் 'நான் முதல்வன்... மேலும் பார்க்க

இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிம த... மேலும் பார்க்க

குரூப் 1 தேர்வு: இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியானது!

குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பணியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. அந்த வகையில்,... மேலும் பார்க்க

போப் இறுதிச் சடங்கு: அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பங்கேற்பு!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்!

கோடை விடுமுறையையொட்டி தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.வருகின்ற ஏப்ரல் 29 முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்ப... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 70% மின் கட்டணம் உயர்வு: இபிஎஸ்

கடந்த 4 ஆண்டுகளில் 70 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை ... மேலும் பார்க்க