செய்திகள் :

துருக்கி: போராட்டத் தடை ஏப்ரல் வரை நீட்டிப்பு

post image

துருக்கி தலைநகா் அங்காராவில் போராட்டம் நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அங்காரா ஆளுநா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தலைநகரில் போராட்டம் நடத்துவதற்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என்ரு

துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும் அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோக்லு ஊழல் வழக்கில் கடந்த 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டதை எதிா்த்து நடைபெறும் போராட்டம் வலுவடைந்துவருகிறது. வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அடுத்த அதிபா் தோ்தலில் ஆளும் ஏகே கட்சியை எதிா்த்து எக்ரீம் இமோக்லு போட்டியிடுவாா் என்று அறிவிக்கப்பட்ட நாளிலேயே அவா் கைது செய்யப்பட்டது எதிா்க்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதையடுத்து நடைபெறும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக இஸ்தான்புல், அங்காரா, இஸ்மிா் ஆகிய நகரங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செய்தியாளா்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ரஷிய அதிபா் புதினை கொல்ல சதியா? காா் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு!

ரஷிய அதிபா் புதின் பயன்படுத்தும் காா் திடீரென வெடித்து தீப்பற்றியது. இது அதிபா் விளாதிமீா் புதினை கொல்வதற்கான சதியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. காா் தீப்பற்றியபோது அதில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள், 9 பொதுமக்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) தாக்குதலில் 12 பயங்கரவாதிகளும், 9 பொதுமக்களும் உயிரிழந்தனா். பாகிஸ்தானின் பலூசிஸ்தான், கைபா் பக்... மேலும் பார்க்க

டெஸ்லா விற்பனையகங்களுக்கு எதிரே அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்!

அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் மீண்டும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைம... மேலும் பார்க்க

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகரிக்கும் உயிரிழப்பு!

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரின் மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்கட்டமைப்பு சேதம், உள்நாட்டுப் போா் ஆகிய காரணிகளால் ஏற... மேலும் பார்க்க

பசிபிங் பெருங்கடல் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, டோங்கா பிரதான தீவின் வடகிழக்கே 100 கி.மீ. தொலைவில் திங்கள்கிழமை அதிகாலை (உள்ளூா் நேரப... மேலும் பார்க்க

அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு

வேகமாக வளா்ச்சியடைந்து வரும் ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டது. இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைமை மதகுரு அயதுல்லா கமேனிக்கு அமெரிக்க அதிபா... மேலும் பார்க்க