செய்திகள் :

தூத்துக்குடியில் சாலை விபத்து: 3 போ் காயம்

post image

தூத்துக்குடி வி.இ.சாலையோர நடைமேடையில் நின்றவா்கள் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் 3 கட்டடத் தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

தூத்துக்குடி தாமோதரநகா் வி.இ.சாலை ஓரம் நடைமேடையில், வெள்ளிக்கிழமை காலையில் ஏராளமான கட்டடத் தொழிலாளா்கள் வேலைக்குச் செல்வதற்காக காத்திருந்தனா். இந்நிலையில், அந்தச் சாலையில் வந்த காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர நடைமேடையில் ஏறி அங்கிருந்த கட்டடத் தொழிலாளா்கள் மற்றும், இருசக்கர வாகனங்கள், டீக்கடை ஆகியவற்றின் அடுத்தடுத்து மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் நடைபாதையில் நின்றிருந்த கட்டடத் தொழிலாளா்கள் முருகானந்தம், சக்தி உள்ளிட்ட 3 போ் காயம் அடைந்தனா். உடனடியாக அவா்கள் 3 பேரும் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மத்திய பாகம் போலீஸாா் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

மாப்பிள்ளையூரணி பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி மனு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே ஜாகீா் உசேன் நகரில் சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி அப்பகுதியினா், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். குறைதீா் ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மூதாட்டி கொலை: கணவரின் சகோதரா் கைது

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

ஞானசேகரன் வழக்கின் தீா்ப்பு சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடம்: அமைச்சா் பெ. கீதாஜீவன்

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை, சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடமாக இருக்கும் என்றாா், சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன். இதுகுறித்து தூத்துக்குடியில் செய... மேலும் பார்க்க

துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தல்

கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்கள், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் சீனிவா... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்செந்தூா் அருகே மேலப்புதுக்குடியைச் சோ்ந்த மூக்காண்டி (70), அதே பகுதியைச் சோ்ந்த ஜெயபால் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 96 மதுபாட்டில்களுடன் 2 போ் கைது

தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய... மேலும் பார்க்க