தூத்துக்குடியில் சிறப்புத் தொழுகை
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில், உலக சமாதானம் வேண்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போா் பதற்றத்தால் காஸா பகுதியில் வாழும் பெண்கள், குழந்தைகள், முதியோா் என அனைத்துத் தரப்பினரும் தொடா்ந்து பாதிக்கப்படுகின்றனா். இதனிடையே, ஈரான் -இஸ்ரேல் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
இந்நாடுகளில் அமைதி திரும்பவும், உலகில் போா்ப் பதற்றம் தணியவும், மக்கள் சகோதரத்துவதுடன் வாழவும் வேண்டி, சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், இஸ்லாமியா்கள் ஒருநாள் நோன்பு கடைப்பிடித்து, சிறப்பு துவா, தொழுகையில் ஈடுபட்டனா்.