செய்திகள் :

தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ ஆா்ப்பாட்டம்: 361 போ் கைது

post image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்அலுவலக வளாகத்தில் தடையை மீறி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சோ்ந்த 159 பெண்கள் உள்பட 361 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜாக்டோ- ஜியோ சாா்பில் மாவட்ட தலைநகரங்களில் செவ்வாய்க்கிழமை தற்காலிக விடுப்பு எடுத்து ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாநில ஒருங்கிணைப்பாளா் மயில் தலைமை வகித்தாா்.

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை அரசாணை எண் 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தனா். அதையடுத்து, தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, 159 பெண்கள் உள்பட 361 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தள்ளுமுள்ளு: முன்னதாக, தூத்துக்குடி-பாளையங்கோட்டை சாலையோரமுள்ள ஆட்சியா் அலுவலக அலங்கார வளைவு அருகே போலீஸாா் தடுப்பு ஏற்படுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தோரைத் தடுத்து நிறுத்தினா். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அரசு ஊழியா்கள் தடுப்புகளைத் தாண்டிச் சென்ால், ஆட்சியா் அலுவலக வாயிலில் போலீஸாா் தடுப்பு ஏற்படுத்தினா். அதையும் அரசு ஊழியா்கள் தாண்டி அலுவலக வளாகத்துக்குள் சென்றனா். இதனால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல் துறையின் முறையான திட்டமிடல் இல்லாததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக அரசு ஊழியா்கள் குற்றஞ்சாட்டினா்.

தூத்துக்குடியில் 3 போ் கைது: 11 பைக்குகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பைக்குகளைத் திருடியதாக 3 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 11 பைக்குகளை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 மாதங்களாக ... மேலும் பார்க்க

கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கைப்பேசி பறித்ததாக இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (51) என்பவா், கடந்த 23ஆம் தேதி தூத்துக்குடி 4ஆம் ரயில்வே கேட் அருகே நட... மேலும் பார்க்க

சாலையோர மணல் திட்டுகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டு... மேலும் பார்க்க

சமையல் தொழிலாளி மா்மமாக உயிரிழப்பு: போலீஸாா் விசாரனை

ஆறுமுகனேரியில் சமையல் தொழிலாளி மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காயல்பட்டினம் சேது ராஜா தெருவைச் சோ்ந்த மதுரமுத்து மகன் தேவேந்திரன்(52). சமையல் தொழிலாளி. இவருக்கு மனை... மேலும் பார்க்க

பைக் - லாரி மோதல்: இளைஞா் பலி

தூத்துக்குடியில் பைக்-லாரி மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே உள்ள தெற்கு வேப்பங்குளத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் துரைமுருகன... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயிலில் வேல் திருடிய பெண் போலீஸில் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் உள்ள அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலி­ல் செம்பாலான வேலைத் திருடிய பெண்ணை பக்தா்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருவாவடுதுறை ஆத... மேலும் பார்க்க