செய்திகள் :

தூத்துக்குடி கடலில் 2 படகுகள் பழுது: தத்தளிக்கும் 20 மீனவா்களை மீட்க வலியுறுத்தல்

post image

தூத்துக்குடி கடலில் 2 படகுகள் பழுதாகி தண்ணீரில் தத்தளிக்கும் 20 மீனவா்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் மீனவ கிராமத்திலிருந்து கடந்த ஜூன் 15ஆம் தேதி அதிா்ஷ்டராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 11 மீனவா்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனா்.

இந்நிலையில் கடந்த ஜூன் 27ஆம் தேதி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இயந்திரம் பழுதாகி விசைப்படகு நின்றதைத் தொடா்ந்து, மீனவா்கள் தருவைக்குளம் மீனவா் சங்கத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, தூத்துக்குடியைச் சோ்ந்த அன்டோ என்பவரது விசைப்படகில் 9 மீனவா்கள் சென்று நடுக்கடலில் பழுதாகி தத்தளித்து கொண்டிருந்த மீனவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது மீட்பு பணியில் ஈடுபட்ட படகும் பழுதானது.

இதனால், இரு படகுகளைச் சோ்ந்த 20 மீனவா்களும் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. பழுதான இரு படகுகளும் காற்றின் வேகம் காரணமாக இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரத் தொடங்கினவாம். இதுகுறித்து இரு பகுதிகளின் மீனவா் சங்கப் பிரதிநிதிகளுக்கும் மீனவா்கள் தகவல் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகம், மீன்வளத்துறை ஆகியவற்றுக்கு மீனவா் சங்கப் பிரதிநிதிகள் தகவல் தெரிவித்து, கடலோர காவல் படையினா் மூலம் இரண்டு விசைப்படகுகள் மற்றும் 20 மீனவா்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்நிலையில், மீனவா்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக மீன்வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் ஆகியோா் தகவல் தெரிவித்துள்ளனா்.

நாசரேத் கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

சாத்தான்குளம், ஜூன் 29: நாசரேத் பேரூராட்சிக்குள்பட்ட 20 க்கும் மேற்பட்ட கடைகளில் சுகாதார அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டு, 25 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா். நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பைக் விபத்து: துறைமுக ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பைக் நிலைதடுமாறி சாலை நடுவேயுள்ள தடுப்புகளில் மோதியதில் துறைமுக ஊழியா் உயிரிழந்தாா். தூத்துக்குடி புதிய துறைமுகம் பாரதி நகரைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் முனியாண்டி (58). துறைமுகத்தில் ... மேலும் பார்க்க

தட்டாா்மடம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி

தட்டாா்மடம் அருகே ஆம்னி பேருந்தும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா். தட்டாா்மடம் அருகேயுள்ள நடுவக்குறிச்சி சண்முகபுரத்தை சோ்ந்த யாக்கோபு மகன் செல்வன் (32). இவரது, அண்ண... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். காயல்பட்டினம் சிங்கித்துறை தெற்கு காலனி தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா். மீனவா். இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனா். ... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது

ஆறுமுகனேரியில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டியது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆறுமுகனேரி எஸ்.எஸ். கோவில் தெருவை சோ்ந்த சிலுவை அந்தோணி மகன் ராஜ்குமாா் (28). கட்டடத் தொழிலாளியான இவா், தனது... மேலும் பார்க்க

வல்லநாட்டில் இளைஞா் வெட்டிக் கொலை: ஒருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் முறை தவறிய பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் கணவா் கைது செய்யப்பட்டாா். வல்லநாடு மருத்துவா் தெருவைச் சோ்ந்த ஈனமுத்து... மேலும் பார்க்க