செய்திகள் :

தூத்துக்குடி: `தந்தையுடனான தொடர்பை கைவிட மறுத்ததால் கொலை செய்தேன்'- போலீஸாரையே அதிரவைத்த இளஞ்சிறார்!

post image

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி  பகுதியில் உள்ள திரேஸ் நகரைச் சேர்ந்தவர் ராமசுப்பு.   இவர் கர்நாடகாவில் டவர் அமைக்கும்  வேலையில் பணிபுரிந்து வருகிறார்.  ராமசுப்புவின் மனைவி சக்தி மகேஸ்வரி  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த  நிலையில் சக்தி மகேஸ்வரிக்கும் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர். 

கொலை செய்யப்பட்ட சக்தி மகேஸ்வரி

காவலருக்கும் சக்தி மகேஸ்வரிக்கும் இருந்த திருமணம் மீறிய தொடர்பு காவலரின் வீட்டிற்கு தெரியவந்ததை தொடர்ந்து அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சக்தி மகேஸ்வரி உடனான தொடர்பை  கைவிடச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.  சக்தி மகேஸ்வரியிடமும் இது குறித்து கூறியுள்ளனர். ஆனால், சக்தி மகேஸ்வரி தொடர்பை துண்டிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. காவலரின் மகனான இளஞ்சிறாரும் தனது தந்தையை பலமுறை கண்டித்து உள்ளார்.  

அவர் கேட்காததால் சக்தி மகேஸ்வரி வீட்டுக்கு சென்று என்னுடைய தந்தையுடன் தொடர்பு வைத்து இருந்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினாராம். ஆனாலும் சக்தி மகேஸ்வரி தொடர்ந்து காவலரும் தொடர்பில் இருந்தாராம். இதைத்தொடர்ந்து வீட்டில் சக்தி மகேஸ்வரி தனியாக இருக்கும்போது அங்கு வந்த காவலர் மகனான இளம் சிறார் மற்றும் அவரது நண்பரான மற்றொரு இளம் சிறார்  ஆகியோர் சக்தி மகேஸ்வரியை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளனர். 

தாளமுத்துநகர் காவல் நிலையம்

இது தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்து நகர் காவல் நிலைய போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் காவலரின் மகனான இளஞ்சிறார், தன் தந்தையுடனான தொடர்பை கைவிட மறுத்ததால் கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டுள்ளார்.  

சென்னை: பெண் தொழிலதிபரிடம் ரூ.10.89 கோடி மோசடி - தம்பதி, வழக்கறிஞர் கைது!

சென்னை, வானகரத்தில் நகைக்கடை நடத்தி வருபவர் ஸ்ரீதேவி (50). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 11.06.2025-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் சுனிதா பிரக... மேலும் பார்க்க

`அப்பாவை ரிலீஸ் செய்றேன்' - சிறுமிக்கு நேர்ந்த அநீதி; பாலியல் வன்கொடுமை செய்த தனிப்பிரிவு ஏட்டு கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் அமைந்திருக்கிறது கரியாலூர் காவல் நிலையம். இந்தக் காவல் நிலையத்தில் செயல்பட்டு வந்த ஒரு பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை ... மேலும் பார்க்க

BMW கார் விபத்து வழக்கில் கைதான பெண், திகார் சிறையில் அடைப்பு; நடந்தது விபத்தா, கொலையா!?

தலைநகர் டெல்லியில் பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஏற்படுத்திய விபத்தில், நிதி அமைச்சகத்தில் பணியாற்றி வந்த நவ்ஜோத் சிங் (வயது 52) என்ற அதிகாரி பலியான சம்பவம் பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. இந்த விபத்... மேலும் பார்க்க

விருதுநகர்: "பாறையாக உள்ள பட்டா நிலத்தை மாற்றி தாங்க" - தீக்குளிக்க முயன்ற பெண்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மொட்டை மலை, பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவருக்கு அப்பகுதியில் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால், "அந்த இடம் முழுவதும் பாறையாக... மேலும் பார்க்க

கடத்தப்பட்ட லாரி கிளீனர்; டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் பூஜா வீட்டில் மீட்ட போலீஸ்... என்ன நடந்தது?

மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே என்ற இடத்தில் சிமெண்ட் மிக்‌ஷர் லாரி ஒன்று மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் மீது லேசாக உரசிச்சென்றது. இதனால் கார் டிரைவருக்கும், சிமெண்ட் மிக்‌ஷரில் இர... மேலும் பார்க்க

உபி: "வெறுத்துப்போய் இம்முடிவை எடுத்தேன்" - விவாகரத்து கொடுக்காத கணவனைக் கொன்ற மனைவி; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் என்ற இடத்தில் வசித்தவர் நாகேஷ்வர். இவரது மனைவி நேகா. இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. நாகேஷ்வர் அவர் வசித்த இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்ச... மேலும் பார்க்க