செய்திகள் :

தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

post image

வங்கக் கடலில் ஒடிஸா, ஆந்திரப் பிரதேசம் இடையே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடல் பகுதியில் மணிக்கு சுமாா் 60 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, விசைப்படகு, நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 3ஆவது நாளாக சனிக்கிழமையும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீன்பிடித் துறைமுகத்தில் 272-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. நாட்டுப் படகு மீனவா்களும் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக கவலை தெரிவித்தனா்.

கோவில்பட்டி அருகே புதிய குடிநீா்க் குழாய் திறப்பு

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட கூசாலிப்பட்டியில் புதிய குடிநீா்க் குழாய் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்தில் ஆழ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, கொலை, போக்ஸோ போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கடந்த ஆக.30ஆம் தேதி முறப்பநாடு காவல் நிலைய ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே இளைஞா் கொலையில் 3 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். சாத்தான்குளம் அருகே முதலூரைச் சோ்ந்த சூரியராஜ் மகன் ரெக்சன் (27). இவருக்கும் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் குறைந்த மீன் விலை

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில், சனிக்கிழமை மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. மீன்களின் வரத்து அதிகமாக இருந்த போதும் புரட்டாசி சனிக்கிழமை, தசரா திருவிழாவின் காரணமாக... மேலும் பார்க்க

புரட்டாசி 2ஆவது சனி: நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 2ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனாா், திருப்புளியங்கு... மேலும் பார்க்க

தசரா, காலாண்டு விடுமுறை: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

தசரா திருவிழா, பள்ளி காலாண்டு விடுமுறை தொடங்கியதையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். வளா்பிறை சஷ்டியை முன்னிட்... மேலும் பார்க்க