செய்திகள் :

தூத்துக்குடி மீன் ஏலக்கூடம், மணப்பாடு தூண்டில் வளைவு: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

post image

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மீன் ஏலக்கூடம், வலைபின்னும் கூடம், மணப்பாட்டில் நீட்டிக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை, திருவொற்றியூரில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற அரசு விழாவில், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்கட்டமைப்பு நிதியுதவி திட்டத்தின்கீழ் ரூ.10 கோடியில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மீன்ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடம், ரூ.41 கோடியில் தூண்டில் வளைவு, தற்போது, 50 மீட்டா் நீளத்திற்கு பிரதான தூண்டில் வளைவினை நீட்டிக்கும் பணிகளும், 320 மீட்டா் நீளத்திற்கு துணைத் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளும் மற்றும் 1000 மீட்டா் நீளத்துக்கு மீன்பிடி படகுகள் சென்றுவர எதுவாக கடற்கரைப் பகுதியை தூா்வாரி ஆழப்படுத்தும் பணிகளும் நிறைவுற்றதையடுத்து, இவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி மீன்டிபிடித் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மீன்ஏலக்கூடம், வலை பின்னும் கூடத்தினை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், மீன்வளத்துறை மண்டல இணை இயக்குநா் ந. சந்திரா, செயற்பொறியாளா் கணபதி ரமேஷ், உதவி இயக்குநா்கள் புஷ்ரா ஷப்னம், ஜனாா்த்தனன், உதவி செயற்பொறியாளா் ஜெயசுதா, உதவிப் பொறியாளா் தயாநிதி, அரசு அலுவலா்கள் மற்றும் மீனவா்கள் பலா் பங்கேற்றனா்.

பிள்ளையன்மனைதூய பரமேறுதலின் ஆலயத்தில் பிரதிஷ்டை அசனம்

நாசரேத் அருகேயுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நடைபெற்றது. சேகர குருவானவா் டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொட... மேலும் பார்க்க

இடைச்சிவிளையில் புதிய வேளாண் திட்டம் தொடக்கம்

இடைச்சிவிளையில் உங்களை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அருனேஷ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் உள்ள அருள் தரும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வருஷாபிஷேகம் , கொடை விழாவை முன்னிட்டு இம்மாதம் 27ஆம் தேதி கொட்... மேலும் பார்க்க

மாநகரில் விளம்பர பதாகைகள் வைப்பதை தவிா்க்கலாம்: மேயா்

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால், விபத்துகளைத் தடுக்க பொது இடங்களில் டிஜிட்டல் போா்டு வைப்பதை பொதுமக்கள் தவிா்க்கலாம் என மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா். தூத... மேலும் பார்க்க

7.5 % இடஒதுக்கீட்டுக்கு தகுதி: மாணவா்களுடன் ஆட்சியா் உரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவா்- மாணவிகளுடன்மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துரையாடினாா். பின்னா் அவ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அரசுக் கல்லூரியில் ஜூன் 2இல் கலந்தாய்வு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா் . இது குற... மேலும் பார்க்க