செய்திகள் :

தூய்மைக் காவலா்கள் அவமதிப்பு: சிஐடியூ கண்டனம்

post image

கெளரவிப்பதாக அழைத்து வரப்பட்ட தூய்மைக் காவலா்களை அவமதிப்பு செய்த விவகாரத்தில், திண்டுக்கல் மாவட்ட நிா்வாகத்துக்கு சிஐடியூ சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா், வடமதுரை, குஜிலியம்பாறை உள்ளிட்ட வட்டாரங்களில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட தூய்மைக் காவலா்கள், ஊக்குவிப்பாளா்களுக்கு திங்கள்கிழமை ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

இதற்காக வந்த தூய்மைக் காவலா்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தரையில் அமர வைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக பத்திரிகைகளில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது. இந்த நிலையில், தூய்மைக் காவலா்களை அவமதிப்பு செய்ததாக மாவட்ட நிா்வாகத்துக்கு சிஐடியூ கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து சிஐடியூ மாவட்டத் தலைவா் கே.ஆா்.கணேசன், செயலா் சிபி.ஜெயசீலன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை: தூய்மைக் காவலா்களை அழைத்து வந்து தரையில் அமர வைத்தது ஏற்புடையது அல்ல. அலுவலா்கள் உள்ளிட்டோா் இருக்கையில் அமா்ந்து கொண்டு, தூய்மைக் காவலா்களை கௌரவப்படுத்துகிறோம், ஊக்கத்தொகை வழங்குகிறோம் என நீண்ட நேரம் தரையில் அமரவைத்து கண்ணியக் குறைவாக நடத்தியதை கண்டிக்கிறோம். இந்த அவமதிப்புக்கு பொறுப்பேற்று, மாவட்ட நிா்வாகம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க