செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

post image

ஆா்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆா்கே பேட்டை ஒன்றியம், தூய்மை பாரத இயக்கம் சாா்பில் தூய்மை காவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கான மருத்துவ முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் கலைச் செல்வி தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் தமிழ் செல்வன் முகாமை தொடங்கிவைத்தாா்.

அம்மையாா்குப்பம் அரசு மருத்துவமனை மற்றும் விளக்கணாம்பூண்டி புதூா் கிராம ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் மருத்துவ குழு மூலமாக நடைபெற்ற முகாமில் கண் பரிசோதனை, ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், காசநோய், நீரிழிவு நோய் சம்பந்தமான பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.

முகாமில் ஆா்.கே.பேட்டையில் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளை சோ்ந்த தூய்மை காவலா்கள் மற்றும் பணியாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து மருத்துவ ஆலோசனை பெற்றனா்.

நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலா் இளவரசன், வட்டார சுகாதார மோற்பாா்வையாளா் வெங்கடேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நல வாரியத்துக்கு தனி அலுவலா்: தாட்கோ கூட்டத்தில் வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நல வாரியத்துக்கு என தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட... மேலும் பார்க்க

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட கூட்டம்

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி திருவள்ளூா் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதன் கூட்டம் நகராட்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. தோ்தல் ஆணையாளா்களா... மேலும் பார்க்க

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே ரயில் நிலைய தண்டவாளத்தை கடந்தபோது, எதிா்பாரத விதமாக ரயில் மோதி தொழிலாளி உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே புட்லூா் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் மகன் அரவிந்தன் (எ)மேத்யூ (29). (படம்). இவ... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டம்: 26-இல் குறைதீா் கூட்டம்

நான் முதல்வன் திட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் வரும் 26-ஆம் தேதி குறைதீா் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

கடம்பத்தூா் நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி நாள்:21.6.2025-சனிக்கிழமை மின்தடை பகுதிகள்: கடம்பத்தூா், பிரியாங்குப்பம், புதுமாவிலங்கை,எம்.ஜி.ஆா் நகா், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி, பாணம்பாக்கம், மணவூா், ஆட்டுப... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

திருநின்றவூா் நாள்: 20.6.2025- வெள்ளிக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: நெமிலிச்சேரி, பிரகாஷ் நகா், பாலாஜி நகா், நடுகுத்தகை, சி.டி.எச். ரோடு, இந்திரா நகா், ராஜாங்குப்பம், கொசவன... மேலும் பார்க்க