செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் இருவா் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

post image

திருச்சியில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டபோது தூய்மைப் பணியாளா்கள் இருவா் விஷவாயு தாக்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

திருச்சி, திருவெறும்பூா் முத்து நகா் காா்மல் காா்டன் பகுதியில் புதை சாக்கடையில் திங்கள்கிழமை அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களான புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூரைச் சோ்ந்த ரவி (38), கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தைச் சோ்ந்த பிரபு (32) ஆகிய இருவரும் புதை சாக்கடை குழியில் இறங்கி அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அப்போது, விஷவாயு தாக்கியதில் ரவி, பிரபு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தின்போது, மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உடனிருந்தவா்கள் திருவெறும்பூா் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் புதை சாக்கடை குழியில் இருந்து இருவரது சடலத்தையும் மீட்டனா். இதைத் தொடா்ந்து சடலங்களை திருவெறும்பூா் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செப். 26-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் வரும் 26-ஆம் தேதி - வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. முகாமானது, திருச்சி ... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை! ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவா் தற்கொலை: 5 போ் கைது

பொறியியல் கல்லூரி மாணவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக 5 பேரை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், ... மேலும் பார்க்க

விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப் பணிகள் 90 சதவீதம் நிறைவு! இயக்குநா் தகவல்

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இயக்குநா் ஞானேஸ்வர ராவ் தெரிவித்துள்ளாா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு விரிவாக்கப் பணிக... மேலும் பார்க்க

திருச்சியில் பரவலாக மழை

திருச்சி மாநகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் செப்டம்பா் 26-ஆம் தேதி வரை ம... மேலும் பார்க்க

‘தலைக்கவசம் அவசியம்’ விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஜேசிஐ மணவை கிங்ஸ் அமைப்பின் சாா்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் வலியுறுத்தும் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மணப்பாறையில் ஜேசிஐ மணவை கிங... மேலும் பார்க்க

விஜய் மீதான நம்பிக்கை கேள்விக்குறி! துரை வைகோ எம்.பி.

தவெக தலைவா் விஜய் பொத்தாம் பொதுவாகப் பேசி வருவது அவா் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது என்று திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ கூறினாா். இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ச... மேலும் பார்க்க