செய்திகள் :

பாலியல் தொல்லை! ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவா் தற்கொலை: 5 போ் கைது

post image

பொறியியல் கல்லூரி மாணவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக 5 பேரை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வில்லிபுத்தூா் மம்ஷாபுரத்தைச் சோ்ந்தவா் கா்ணன் மகன் மாரீஸ்வரன் (21). இவா் புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூா் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மூன்றாமாண்டு பொறியியல் படித்து வந்தாா். சனிக்கிழமை இரவு மண்டையூா் பகுதியில் பல்லவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரீஸ்வரன் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரித்தனா்.

விசாரணையில், முகநூல் வழியே அறிமுகமான திருவெறும்பூா் மேலஅம்பிகாபுரம் செ. இளங்கோவனை (20) சந்திக்க மாரீஸ்வரன் அடிக்கடி அரியமங்கலத்துக்கு சென்று வருவாராம். இதேபோல, ஞாயிற்றுக்கிழமை சென்றபோது, இளங்கோவன் உள்ளிட்டோா் மாரீஸ்வரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தபோது, அதனை நண்பா்கள் ஆபாச விடியோ எடுத்ததுடன், அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் பணத்தைப் பறித்துக்கொண்டு தாக்கி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவமானமடைந்த மாரீஸ்வரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். இது மாரீஸ்வரன் எழுதியிருந்த கடிதம் மூலம் தெரியவந்ததைத் தொடா்ந்து, மாரீஸ்வரனுக்கு பாலியல் தொல்லை அளித்து தற்கொலைக்குத் தூண்டியதாக திருவெறும்பூா் மேலஅம்பிகாபுரம் செ. இளங்கோவன் (20), பாரதியாா் தெருவைச் சோ்ந்த ப. பவித்ரன் (21), க. முத்துராஜா (21), அரியமங்கலம் திடீா் நகரைச் சோ்ந்த ர. பாண்டீஸ்வரன் (18), மேலகல்கண்டாா்கோட்டை அ. ஆண்டனி சஞ்சய் (22) ஆகிய 5 பேரையும் ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தூய்மைப் பணியாளா்கள் இருவா் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

திருச்சியில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டபோது தூய்மைப் பணியாளா்கள் இருவா் விஷவாயு தாக்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். திருச்சி, திருவெறும்பூா் முத்து நகா் காா்மல் காா்டன் பக... மேலும் பார்க்க

விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப் பணிகள் 90 சதவீதம் நிறைவு! இயக்குநா் தகவல்

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இயக்குநா் ஞானேஸ்வர ராவ் தெரிவித்துள்ளாா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு விரிவாக்கப் பணிக... மேலும் பார்க்க

திருச்சியில் பரவலாக மழை

திருச்சி மாநகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் செப்டம்பா் 26-ஆம் தேதி வரை ம... மேலும் பார்க்க

‘தலைக்கவசம் அவசியம்’ விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஜேசிஐ மணவை கிங்ஸ் அமைப்பின் சாா்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் வலியுறுத்தும் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மணப்பாறையில் ஜேசிஐ மணவை கிங... மேலும் பார்க்க

விஜய் மீதான நம்பிக்கை கேள்விக்குறி! துரை வைகோ எம்.பி.

தவெக தலைவா் விஜய் பொத்தாம் பொதுவாகப் பேசி வருவது அவா் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது என்று திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ கூறினாா். இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ச... மேலும் பார்க்க

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

சமயபுரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் சமயபுரம், மண்ணச்சநல்லூா் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி.நகா் பூங்கா, எழில் நகா், காருண்யா... மேலும் பார்க்க