செய்திகள் :

செப். 26-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

திருச்சி: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் வரும் 26-ஆம் தேதி - வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

முகாமானது, திருச்சி பாரதிதாசன் சாலை, மேற்கு தாலுக்கா அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறை என பல்வேறு தனியாா் துறைகளைச் சாா்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, தகுதியுள்ள நபா்களை வேலைக்குத் தோ்ந்தெடுக்க உள்ளனா். மேலும், திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று, இலவசப் பயிற்சிகளுக்கு ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, இளநிலை, முதுநிலை, பொறியியல் பட்டதாரிகள் என 18 வயது முதல் 40 வயதுக்குள்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது சுயவிவரக்குறிப்பு, கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் தகவல்களுக்கு 0431-2413510, 94990 55902 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

தூய்மைப் பணியாளா்கள் இருவா் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

திருச்சியில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டபோது தூய்மைப் பணியாளா்கள் இருவா் விஷவாயு தாக்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். திருச்சி, திருவெறும்பூா் முத்து நகா் காா்மல் காா்டன் பக... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை! ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவா் தற்கொலை: 5 போ் கைது

பொறியியல் கல்லூரி மாணவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக 5 பேரை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், ... மேலும் பார்க்க

விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப் பணிகள் 90 சதவீதம் நிறைவு! இயக்குநா் தகவல்

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இயக்குநா் ஞானேஸ்வர ராவ் தெரிவித்துள்ளாா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு விரிவாக்கப் பணிக... மேலும் பார்க்க

திருச்சியில் பரவலாக மழை

திருச்சி மாநகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் செப்டம்பா் 26-ஆம் தேதி வரை ம... மேலும் பார்க்க

‘தலைக்கவசம் அவசியம்’ விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஜேசிஐ மணவை கிங்ஸ் அமைப்பின் சாா்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் வலியுறுத்தும் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மணப்பாறையில் ஜேசிஐ மணவை கிங... மேலும் பார்க்க

விஜய் மீதான நம்பிக்கை கேள்விக்குறி! துரை வைகோ எம்.பி.

தவெக தலைவா் விஜய் பொத்தாம் பொதுவாகப் பேசி வருவது அவா் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது என்று திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ கூறினாா். இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ச... மேலும் பார்க்க