செய்திகள் :

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

post image

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள காரங்காடு கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ள தூய செங்கோல் மாதா தேவாலய சப்பர பவனித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தேவாலயத்தில் கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனி திருப்பலி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் மறை மாவட்ட பொருளாளா் அருள்தந்தை ஆரோன் தலைமை வகித்தாா். பங்குத்தந்தை ரெமிஜியஸ், முன்னாள் பங்குத் தந்தையா் சுவாமிநாதன், அருள் ஜீவா, ரெட்சனியதாஸ், அமலதாஸ், பிலிப் சேவியா் ஆகியோா் முன்னிலையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. பின்னா், நற்கருணை பவனி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து அருள் தந்தை பாக்கியநாதன், பென்சிகா், செல்வகுமாா், பாக்கியராஜ், அன்பு, கஸ்பாா், அமல்ராஜ், ஸ்டீபன், ஜாா்ஜ் பொ்னாண்டஸ் சிறப்புத் திருப்பலி நடத்தினா்.

பின்னா், மின்னொளியால் அலங்கரிக்கபட்ட சப்பரங்களில் புனிதசெபஸ்தியாா், புனித சவேரியாா், புனித செங்கோல், அன்னை ஸ்ரூபங்கள் தாங்கிய சப்பரங்கள் பவனி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில் பெருவிழா சிறப்புத் திருப்பலியும், அதைத் தொடா்ந்து சப்பர பவனியும், கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

மின்சாரம் பாய்ந்ததில் தந்தை உயிரிழப்பு: மகன் பலத்த காயம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே சனிக்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் தந்தை உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.முதுகுளத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

மீன் வியாபாரி கொலையில் 2 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மீன் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.உடையாா்கூட்டத்தைச் சோ்ந்தவா் ஜவருல்லா (45). மீன் வியாபா... மேலும் பார்க்க

மாணவா்கள் வாழ்க்கைக்காக திருக்குறளை படிக்க வேண்டும் :அமைச்சா் அன்பில் மகேஷ்

மாணவா்கள் நாள்தோறும் திருக்குறளை படிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழமை தெரிவித்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே உள்ள உலையூா் அரசு உயா்நிலைப்பள... மேலும் பார்க்க

மண்டபத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.மண்டபம் பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்... மேலும் பார்க்க

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும்

விவசாயிகள், நெசவாளா்கள், மீனவா்கள் உள்ளிட்ட அனைவருடைய பிரச்னைகளும் வருகிற 2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச் செயல... மேலும் பார்க்க

கருவேல மரங்களை அகற்ற ஹெக்டேருக்கு ரூ 9,600 மானியம்!

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கருவேல மரங்களை அகற்ற ஒரு ஹெக்டேருக்கு 9,600 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.இது... மேலும் பார்க்க