செய்திகள் :

தெகிடி இயக்குநருடன் மீண்டும் இணையும் அசோக் செல்வன்!

post image

தெகிடி இயக்குநர் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகர் அசோக் செல்வன் 12 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் அறிமுகமானவர், ‘பிட்சா - 2 ‘ மூலம் நாயகன் ஆனார்.

அப்படம் பெரிதாகக் கவனம் பெறவில்லை என்றாலும் அடுத்ததாக, ‘தெகிடி’ என்கிற கிரைம் திரில்லர் படத்தில் நாயகனாக நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார். பி. ரமேஷ் இயக்கத்தில் உருவான இப்படம் வணிக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது.

தொடர்ந்து, ’கூட்டத்தில் ஒருவன்’, ‘ஓ மை கடவுளே’ படங்கள் வழியாகத் தன்னை நடிகனாக அசோக் செல்வன் நிலைநிறுத்திக்கொண்டார்.

ஆனால், தெகிடி படம் வெளியாகி 11 ஆண்டுகள் கடந்தும் அப்பட இயக்குநர் ரமேஷ் அடுத்தபடம் இயக்காமல் இருக்கிறார். தெகிடி படத்தை முடித்ததும் அவர் மீண்டும் ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அசோக் செல்வன் - ரமேஷ் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் கிரைம் திரில்லர் பின்னணியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ‘பொறாமையா இருக்கு..’ கமல் ஹாசனால் கண்கலங்கிய ஜோஜூ ஜார்ஜ்!

எனது சிறிய பெருங்குழப்பமே..! மகனுக்காக ஜெனிலியா உருக்கம்!

நடிகை ஜெனிலியா தனது மகன் பிறந்தநாளுக்காக ”நீதான் எனது பெருங்குழப்பம்” என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஜெனிலியா (37) பாய்ஸ் படத்தில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் பல தமிழ்ப் படங... மேலும் பார்க்க

மகாராஜா இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் திரைக்கதையாளர்!

மகாராஜா திரைப்படத்தின் இயக்குநர் நித்திலனை ஆஸ்கர் விருதுபெற்ற திரைக்கதையாசிரியர் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்... மேலும் பார்க்க

2 கோல்கள், 2 அசிஸ்ட்ஸ்: இன்டர் மியாமிக்காக மெஸ்ஸி புதிய சாதனை!

இன்டர் மியாமி அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அந்த் அணிக்காக குறைவான போட்டிகளில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்க... மேலும் பார்க்க

குபேரா விழாவிற்கு ஜோடியாக வந்த தனுஷ் - ஐஸ்வர்யா! இணைந்து வாழ முடிவு?

குபேரா இசைவெளியீட்டு விழாவில் தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இணைந்து பங்கேற்றுள்ளனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் தொடர் படப்பிடிப்பிலேயே இருக்கிறார். இவர் நடிப்பில் உருவான குபேரா, இட்லி க... மேலும் பார்க்க

ஆண்கள் நடிகைகளைச் சுலபமாகத் தொடுகின்றனர்: நித்யா மெனன்

நடிகை நித்யா மெனன் நடிகைகளிடம் ஆண்கள் நடந்துகொள்ளும் விதத்தைக் கண்டித்துள்ளார். நடிகை நித்யா மெனன் தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தைப் ... மேலும் பார்க்க

பாலினம் கண்டறியும் புதிய சோதனை: குத்துச்சண்டை போட்டியாளர்களுக்கு சிக்கல்?

உலக குத்துச்சண்டையின் புதிய அமைப்பு போட்டியாளர்களுக்கு பாலினம் கண்டறியும் பிசிஆர் எனும் புதிய சோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது. 18 வயதைக் கடந்த அனைத்து போட்டியாளர்களும் இந்தப் பரிசோதனையை செய்தபிறகே போட்... மேலும் பார்க்க