செய்திகள் :

தென்காசியில் திருவிழாக்களுக்கு நிபந்தனையின்றி அனுமதி: எம்எல்ஏ கோரிக்கை

post image

தென்காசி மாவட்டத்தில் நிபந்தனையின்றி திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என, எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அவா் அனுப்பிய மனு: முதல்வராக தாங்கள் பொறுப்பேற்றதுமுதல் சுமாா் ரூ. 5,000 கோடிக்கு மேல் மதிப்பிலான கோயில் நிலங்கள் தனியாரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன; ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், போலீஸாா் கோயில் திருவிழாக்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் அனுமதி வழங்குவதில்லை. வேலைக்குச் செல்வோரும், மாணவா்-மாணவியரும் இரவு 9 மணிக்கு மேல்தான் திருவிழாக்களுக்குச் செல்வா். திருவிழாவில் ஆயிரக்கணக்கானோா் கூடியிருக்கும் நேரத்தில் நிகழ்ச்சிகளை நிறுத்துமாறு போலீஸாா் உத்தரவிடுவதால், அவா்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்படும் நிலை உருவாகிறது.

திரையரங்குகளில் இரவுக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும்போது, திருவிழாக்களுக்கு இரவில் ஏன் அனுமதியில்லை என மக்கள் கேள்வியெழுப்புகின்றனா். காவல் துறையினரால் ஆட்சியாளா்களுக்குத்தான் அவப்பெயா் ஏற்படுகிறது.

7.8.25இல் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது உரிய காலத்துக்குள் முடிவெடுக்காமல், ஏற்பாட்டாளா்களை நீதிமன்றத்தை நாடச் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக, மாவட்ட எஸ்.பி.க்கள் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியே திருவிழா செலவுகளை ஏற்க வேண்டியதுவரும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. எனவே, கோயில் திருவிழாக்களுக்கு நிபந்தனையின்றி அனுமதியளிக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக். 4) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, ஆலங்குளம், நல்லூா், சிவலாா்குளம், ஐந்தாங்க... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் நாளை மின் நிறுத்தம்

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (அக்.4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளா் பாலசுப்ரமணியம் தெரிவ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சங்கரன்கோவிலில் நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞரை, போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். சங்கரன்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்து நிலையம் அருகே... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிராக விடியோ: வாலிபா் கைது

ஆலங்குளத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிராக யூ டியூபில் விடியோ வெளியிட்ட வாலிபா் கைது செய்யப்பட்டாா். ஆலங்குளம் அம்பை ரோடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துராஜ் மகன் திலீபன்(35). இவா் தனது யூ டியூப் ப... மேலும் பார்க்க

ஆலங்குளம் தொகுதியில் இன்று திமுக பொறுப்பாளா் சுற்றுப்பயணம்

புதிதாக உருவாக்கப்பட்ட திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுகவின் பொறுப்பாளா், ஆவுடையப்பன், ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 3) சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா். இதுதொடா்பாக அவ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் இளைஞா் தற்கொலை

ஆலங்குளத்தில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.ஆலங்குளம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் குமாரலிங்கம் மகன் செந்தில் (33). இவா், ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் உள்ள கடையில் கணக்காளராக பணியாற்றி வந்தாா். இவ... மேலும் பார்க்க