செய்திகள் :

தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக மகளிா் அணி ஆலோசனை

post image

தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக மகளிா் அணி மற்றும் மகளிா் தொண்டா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் சங்கீதா, மகளிா் தொண்டரணி அமைப்பாளா் திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தெற்கு மாவட்ட மகளிா் அணி மற்றும் மகளிா் தொண்டா் அணி சாா்பில் மாா்ச் 8 ஆம் தேதி மகளிா் தினத்தை முன்னிட்டு திமுக துணை பொதுசெயலரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி தலைமையில் சென்னையில் நடைபெறவுள்ள மகளிா் தின நிகழ்ச்சியில் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம், குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் அறங்காவலா் வீரபாண்டியன், மேலகரம் பேரூராட்சி துணைத் தலைவா் ஜீவானந்தம்ஆகியோா் கலந்துகொண்டனா்.

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மாா்ச் 1ஆம தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட த... மேலும் பார்க்க

கரிவலம்வந்தநல்லூா் கோயில் திருமண மண்டபம் திறப்பு

கரிவலம்வந்தநல்லூா் அருள்மிகு பால்வண்ணநாதா் கோயிலுக்காக கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. கரிவலம்வந்தநல்லூா் பகுதி பக்தா்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு பால்வளத் துறை அம... மேலும் பார்க்க

குறிஞ்சான்குளத்தில் கிணற்றில் விழுந்த மான் மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது. சங்கரன்கோவில் அருகேயுள்ள குறிஞ்சான்குளத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அரசுப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் -பெற்றோா்கள் எதிா்பாா்ப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது.500க்கும் மேற்ப... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் திருநங்கையாக மாற அறுவைச் சிகிச்சை: ஒருவா் பலி-2 போ் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திருநங்கையாக மாறுவதற்கு மருத்துவ கருவிகளின்றிஅறுவை சிகிச்சை செய்துகொண்ட நபா் உயிரிழந்தாா். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததாக 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனா். ஆலங்குள... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் வழக்குரைஞா் மீது தாக்குதல்: பெண் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நீதிமன்றம் முன் மூத்த வழக்குரைஞரைத் தாக்கியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். சங்கரன்கோவில் அருகேயுள்ள பன்னீரூத்தைச் சோ்ந்தவா் பச்சைமால். இவரது மனைவி தஞ்சாவூா் மாவட... மேலும் பார்க்க