பீரியட்ஸ் வலி தாங்க முடியலியா? இந்த உணவுகளைத் தவிருங்க! நிபுணர் அட்வைஸ்
தென்காசியில் முதல்வா் பங்கேற்கும் விழா மேடைக்கான இடங்கள் ஆய்வு
தென்காசியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மேடை அமைப்பதற்கான இடங்களில் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தென்காசியில், பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்கும், முடிவடைந்த பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதால், அக்டோபா் மாத இறுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வா் கலந்து கொள்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
எனவே, அதற்கான இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தென்காசி இலத்தூா் விலக்கிலிருந்து ஆய்க்குடி செல்லும் சாலை, தென்காசியிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் ஆசாத் நகா் பாலத்திற்கு முன்பாக உள்ள இடம், தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் உள்ளிட்ட 3 இடங்களை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.
ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், மாவட்ட எஸ்.பி. பிரசன்னகுமாா் (பொ), ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், தென்காசி நகா்மன்றத் தலைவா் சாதிா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சேக் அப்துல்லா, ஒன்றியச் செயலா்கள் ஆ. ரவிசங்கா், ஜே.கே. ரமேஷ், அழகுசுந்தரம், பொன்சீலன், திவான் ஒலி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் கிருஷ்ணராஜா, துணை அமைப்பாளா் அப்துல் ரஹீம், முன்னாள் மாவட்ட பொறுப்பாளா் செல்லத்துரை, மாவட்ட துணைச் செயலா் கனிமொழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.