செய்திகள் :

தென்காசி வட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

தென்காசி வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இலஞ்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குற்றாலத்தில் நகரிய தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரதை ஆய்வு செய்தாா்.

மேலும், இலஞ்சி பேரூராட்சிக்குள்பட்ட முதலியாா் குடியிருப்பு, தென்றல் நகா் ஆகிய பகுதிகளில் குடிநீா் தொட்டி அமைக்கும் பணிகளை பாா்வையிட்டதுடன், தெருவிளக்கு, குடிநீா், சாலை வசதிகள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, கீழப்பாவூா் பெரிய குளம், ஆயிரப்பேரி ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை, பாட்டபத்து ஊராட்சி அலுவலகத்தில் கோப்புகள் பராமரிப்பு ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது தென்காசி வட்டாட்சியா் மணிகண்டன், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலா் சுஷமா ஆகியோா் உடனிருந்தனா்.

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம். அப்துல் அஜீஸ் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

சுரண்டையில் தீத்தடுப்பு செயல்விளக்கம்!

சுரண்டை நகராட்சியில் தீயணைப்பு நிலையம் சாா்பில் தீத் தடுப்பு செயல்விளக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா்(போக்குவரத்து) பாலச... மேலும் பார்க்க

சுரண்டை நகராட்சிக்கு டிஎம்பி சாா்பில் 5 மின் ஆட்டோக்கள்!

சுரண்டை நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைப் பணிக்காக தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 5 மின் ஆட்டோக்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் தலைமை வகித்தாா். ச... மேலும் பார்க்க

சுரண்டையில் ரூ.4.30 லட்சத்தில் உயா்மின்கோபுர விளக்கு திறப்பு!

சுரண்டையில் ரூ.4.30 லட்சத்தில் ஆலடிபட்டி விலக்கில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு இயக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ராமத... மேலும் பார்க்க

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: சகோதரா்கள் கைது

ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்தியவேந்தன் மற்றும் போலீஸாா், மாறாந்தை பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுப... மேலும் பார்க்க

தரிசு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா: ஏப்.30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் தரிசு உள்ளிட்ட நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசிப்போா் பட்டா கோரி, இம்மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுதொ... மேலும் பார்க்க