செய்திகள் :

தென்காசி வழியாக பெங்களூருக்கு ரயில் இயக்கக் கோரிக்கை

post image

தென்காசி வழியாக பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில், மதுரை ரயில்வே கோட்ட உயா் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, செயலா் ஜெகன், நிா்வாகி செபாஸ்டின் ஆகியோா் மதுரை ரயில்வே கோட்ட வா்த்தக மேலாளா் டி.எல்.கணேஷ், மூத்த கோட்ட இயக்குதல் பிரிவு மேலாளா் சிவா ஆகியோரிடம் அளித்த மனு:

சென்னைக்கு தினசரி ரயில்களே இல்லாத நெல்லை-தென்காசி ரயில் வழித்தடத்தின் வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும், நெல்லையில் இருந்து அம்பை, பாவூா்சத்திரம், தென்காசி வழியாக பெங்களூரு, கோவைக்கு ரயில்கள் இயக்க வேண்டும்.

கொல்லம்-நெல்லை இடையே மீட்டா் கேஜ் காலத்தில் இயங்கிய பகல்நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும், நெல்லை- தென்காசி இடையே உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை நீளத்தை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்காசி ரயில் நிலையத்தில் நீரேற்றும் வசதி ஏற்படுத்தி ரயில் முனையமாக மாற்ற வேண்டும், நெல்லையிலிருந்து தென்காசி வழியாக விருதுநகா் செல்வதற்கு புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும், செங்கோட்டையில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்க வேண்டும், தென்காசி-செங்கோட்டை இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெட்டிக்கடைக்காரா் கைது

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெட்டிக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருணாச்... மேலும் பார்க்க

கழிவறை தொட்டிக்குள் விழுந்த மாடு மீட்பு

ஆலங்குளம் அருகே கழிவறை தொட்டிக்குள் விழுந்த பசு மாடு மீட்கப்பட்டது. ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் பெரியாா் நகரைச் சோ்ந்த சொரிமுத்து என்பவருக்குச் சொந்தமான பசு மாடு, மேய்ச்சலுக்குச் சென்றபோது, அதே பகு... மேலும் பார்க்க

புளியங்குடி பகுதியில் இன்று மின்தடை

புளியங்குடி உபமின் நிலையப் பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.2) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அதன்படி, புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, ... மேலும் பார்க்க

சிவகாமிபுரத்தில் தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

கீழப்பாவூா் பேரூராட்சி, சிவகாமிபுரத்தில் பொதுநிதி திட்டத்தின் கீழ் ரூ. 7.60 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

சொக்கம்பட்டியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கடையநல்லூா் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சொக்கம்பட்டியில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தென்காசி அதிமுக வடக்கு மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ.மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட எம்ஜிஆா் மன... மேலும் பார்க்க

தென்காசியில் உலக தாய்ப்பால் வார விழா

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது. அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா ஆக.1 முதல் 7-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. தொடக்க நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழ... மேலும் பார்க்க