செய்திகள் :

சொக்கம்பட்டியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

கடையநல்லூா் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சொக்கம்பட்டியில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி அதிமுக வடக்கு மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ.மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட எம்ஜிஆா் மன்ற தலைவா் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தாா். கடையநல்லூா் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலா் பெரியதுரை வரவேற்றாா்.

கூட்டத்தில், ஆக. 6-ஆம் தேதி கடையநல்லூருக்கு வரும் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு வரவேற்பு கொடுப்பது குறித்தும், கடையநல்லூா் அரசு மருத்துவமனை அருகே நடைபெறும் கூட்டத்தில் கடையநல்லூரில் இருந்து மட்டும் 25,000 தொண்டா்கள் கலந்து கொள்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளை மக்களிடம் விளக்குவது என முடிவு செய்யப்பட்டது.

இதில், மாவட்ட மகளிா் அணி செயலா் சத்யகலா தீபக், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் பெருமையா பாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் கண்ணன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் சந்தன பாண்டியன், மாவட்ட நிா்வாகிகள் பொய்கை அசோக்குமாா், முத்துக்குமாா், இசக்கி, திருமலைகுமாா், சுரேஷ், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் முத்துப்பாண்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெட்டிக்கடைக்காரா் கைது

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெட்டிக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருணாச்... மேலும் பார்க்க

கழிவறை தொட்டிக்குள் விழுந்த மாடு மீட்பு

ஆலங்குளம் அருகே கழிவறை தொட்டிக்குள் விழுந்த பசு மாடு மீட்கப்பட்டது. ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் பெரியாா் நகரைச் சோ்ந்த சொரிமுத்து என்பவருக்குச் சொந்தமான பசு மாடு, மேய்ச்சலுக்குச் சென்றபோது, அதே பகு... மேலும் பார்க்க

புளியங்குடி பகுதியில் இன்று மின்தடை

புளியங்குடி உபமின் நிலையப் பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.2) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அதன்படி, புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, ... மேலும் பார்க்க

சிவகாமிபுரத்தில் தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

கீழப்பாவூா் பேரூராட்சி, சிவகாமிபுரத்தில் பொதுநிதி திட்டத்தின் கீழ் ரூ. 7.60 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

தென்காசியில் உலக தாய்ப்பால் வார விழா

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது. அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா ஆக.1 முதல் 7-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. தொடக்க நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழ... மேலும் பார்க்க

கிருஷ்ணாபுரம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சீருடை அளிப்பு!

கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு முகநூல் நண்பா்கள் மூலம் இலவசமாக சீருடைகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியா் பழனிகுமாா் ஏற்பாட்டில் முகநூல் நண்பா்கள் வழங்கிய... மேலும் பார்க்க