செய்திகள் :

தென்னாங்கூா் அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு

post image

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை மாணவா்களுக்கான 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது.

இதுகுறித்து அந்தக் கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை:

2025-26-ஆம் கல்வியாண்டின் இளநிலை மாணவா்களுக்கான 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதில், பி.காம்., பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய கலை பாடப்பிரிவுகளுக்கும், பி.எஸ்சி., இயற்பியல், உயிரி வேதியியல், கணினி அறிவியல், கணிதம், விலங்கியல் ஆகிய அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாத மாணவா்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் உரிய சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், சோ்க்கை கட்டணம், மாா்பளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் காலை 9 மணிக்குள் கல்லூரிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே விற்பனைக்காக கஞ்சாவை பைக்கில் கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் செய்யாறு - ஆற்காடு சாலையில் தூளி கூட்டுச... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் 100 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை தேரடி தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 11 ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சால... மேலும் பார்க்க

ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை: வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்

வந்தவாசி நகரை ஒட்டியுள்ள பாதிரி ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தெரிவித்தாா். வந்தவாசி நகரில் உள்ள இறைச்சி விற்பனை ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆரணி, அனக்காவூா், செங்கம் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. ஆரணி ஒன்றியத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 2... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள... மேலும் பார்க்க

விவசாயியிடம் பைக் பறிப்பு: இருவா் கைது

செய்யாறு அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்ய... மேலும் பார்க்க