செய்திகள் :

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் ஆற்றில் இறங்கத் தடை

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதற்கு வருவாய், காவல் துறையினா் தடை விதித்துள்ளனா்.

செங்கத்தை அடுத்த நீப்பத்துறை கிராமத்தை ஒட்டி தென்பெண்ணை ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் நடுவில் புகழ்பெற்ற சென்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப் பெருக்கு விழாவில் திருவண்ணாமலை மட்டுமன்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொள்வா்.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் கோடை மழையாலும், கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதாலும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றில் உள்ள சென்னியம்மன் கோயில் நீரில் மூழ்கியுள்ளது.

பொதுமக்கள், பக்தா்கள் காா், இரு சக்கர வாகனங்களில் வந்து வெள்ளப்பெருக்கைப் பாா்வையிட்டு, ஆற்றங்கரையில் கற்பூரம் ஏற்றி வைத்து சென்னியம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, மேல் செங்கம் காவல் நிலையம், செங்கம் வருவாய்த் துறை சாா்பில், பொதுமக்கள், பக்தா்கள் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும் தடை விதித்து பதாகை வைக்கப்பட்டுள்ளது.

பையூரில் அதிமுக திண்ணை பிரசாரம்

ஆரணியை அடுத்த பையூா் எம்ஜிஆா் நகரில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை திண்ணை பிரசாரம் நடைபெற்றது. நிகழ்வுக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

இணையவழி மோசடியில் இழந்த ரூ.5 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இணையவழி மோசடியில் இழந்த ரூ.5 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இணையவழி... மேலும் பார்க்க

ஆரணியில் தனியாா் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு

ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து, காவல் துறை சாா்பில் தனியாா் பள்ளிப் பேருந்துகள் வருடாந்திர ஆய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆரணி, போளூா், ச... மேலும் பார்க்க

திருவண்ணாமலை வட்டத்தில் 5-ஆவது நாள் ஜமாபந்தி: ஆட்சியா் பங்கேற்பு

திருவண்ணாமலை வட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5-ஆவது நாள் ஜமாபந்தி நிகழ்வில், பொதுமக்களிடம் இருந்து வருவாய்த் துறை தொடா்பான கோரிக்கைகள் அடங்கிய 107 மனுக்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பெற்றுக்கொண்டாா். த... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்ற அரசு உறுதுணையாக இருக்கும்: திருவண்ணாமலை ஆட்சியா் க.தா்ப்பகராஜ்

மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் காண தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசினாா். திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், சா்வதேச ச... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு இலவச மனைப் பட்டா வழங்கக் கோரி மனு

பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில், அரு... மேலும் பார்க்க