செய்திகள் :

'தென் ஆப்பிரிக்காவிற்கே சென்றுவிட வேண்டியது தான்' - மீண்டும் வலுக்கும் ட்ரம்ப் - மஸ்க் மோதல்!

post image

'ஒன் பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்' - இந்தப் பெயரை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உச்சரித்ததில் இருந்து தான், அவருக்கும், அவரது உற்ற நண்பன் எலான் மஸ்கிற்கு வாய்க்கால் வரப்பு தகராறு தொடங்கியது.

இந்தப் பில்-லுக்கு பொதுவெளியில் எலான் மஸ்க் கருத்து தெரிவித்ததில் தொடங்கிய இந்தத் தகராறு இன்னும் ஓய்ந்தபாடில்லை. ட்ரம்ப் குறித்து தொடர்ந்து அவதூறாக பதிவிட்டு வந்த மஸ்க்கை, 'அதிக வரி விதிப்பு' என்ற காயைக் காட்டி பேக் அடிக்க வைத்தது ட்ரம்ப் அரசு.

அதன் பிறகு, 'எல்லை மீறி பேசிவிட்டேன்... இப்போது வருத்தப்படுகிறேன்' என்று மன்னிப்பு கேட்கும் தொனியில் பதிவிட்ட மஸ்க், அதன் பிறகு கொஞ்சம் அடக்கியே வாசித்தார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

எலான் மஸ்க்கின் நேற்றைய பதிவுகள்

இந்த நிலையில், மீண்டும் பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில் பேச்சு அடி பட, எலான் மஸ்க், நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தப் பைத்தியகரத்தனமான சட்டம் அமல்படுத்தப்பட்டால், அடுத்த நாளே, `அமெரிக்கா கட்சி’ தொடங்கப்படும்.

நமது நாட்டிற்கு ஜனநாயக - குடியரசு ஒற்றை கட்சிக்கு மாற்று வேண்டும். அப்போது தான், மக்கள் குரல் பெறுவார்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவிற்கு முந்தைய பதிவில், 'அரசாங்கத்தின் செலவை குறைப்பேன் என்று பிராசாரம் செய்துவிட்டு, அமெரிக்காவின் கடனை பெரியளவில் அதிகரிக்கும் சட்டத்திற்கு உடனடியாக வாக்களித்த அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும், வெட்கி தலை குனிய வேண்டும்.

மேலும், என்ன ஆனாலும், அவர்கள் அடுத்த ஆண்டு நடக்க உள்ள பிரைமரி தேர்தலில் தோற்பதை உறுதி செய்வேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவுகளின் மூலம், எலான் மஸ்க் ட்ரம்பின் இந்த சட்டத்திற்கு மீண்டும் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார். இவரது கருத்துகளுக்கு அமெரிக்காவில் ஆதரவுகளும் அதிகம் பெறுகிறது.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

ட்ரம்ப் பதில் பதிவு

ஆனால், எலான் மஸ்க்கின் இந்தக் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், "எலான் மஸ்க் தேர்தலில் என்னை ஆதரிப்பதற்கு முன்பே, அவருக்கு நன்கு தெரியும், நான் எலெக்ட்ரிக் வாகனங்களின் சலுகைகளுக்கு எதிரானவன் என்று. இது என்னுடைய தேர்தல் பிரசாரத்தின் மிக முக்கிய பகுதி ஆகும்.

எலெக்ட்ரிக் கார்கள் என்பது நல்லது தான். ஆனால், அனைவரும் ஒன்றை வாங்க வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு, எலானுக்கு அதிக சலுகைகள் கிடைத்துள்ளது.

இந்த சலுகைகள் இல்லையென்றால், அவர் தனது கடையை மூடிவிட்டு, தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றுவிட வேண்டியது தான்.

பின்பு, ராக்கெட்டுகள், சாட்டிலைட்டுகள், எலெக்ட்ரிக் கார் உற்பத்தி எதுவும் இருக்காது. இதன் மூலம், நம் நாடு லாபம் அடையும். DOGE இதுகுறித்து பார்க்க வேண்டும். பெரிய அளவிலான பணம் காப்பாற்றப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

இது எலான் மஸ்கிற்கு மறைமுகமான மிரட்டல் என்றே கருதலாம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`மாநில அரசு செய்த கொலை!' - DMK அரசை வெளுத்து வாங்கிய High Court | STALIN | Imperfect Show 1.7.2025

* அஜித்தை கண்மூடித்தனமாகத் தாக்கும் பகீர் வீடியோ! காவல்துறையினரின் அத்துமீறல் அம்பலம்!* திருப்புவனம் லாக்கப் மரணம்: "கால் இடறி கீழே விழுந்ததில், வலிப்பு ஏற்பட்டு மரணம்" - FIR சொல்வது என்ன? * மாநில அரச... மேலும் பார்க்க

"SORRY தான் பதிலா? அலட்சியத்தின் உச்சம்; கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியே இல்லை" - ஸ்டாலினை சாடும் இபிஎஸ்

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

அஜித்குமார் மரணம்: "போலீஸ் தாக்குதல்தான் காரணம் என அறிந்து வேதனையடைந்தேன்; CBI விசாரணை" - ஸ்டாலின்

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

திருப்புவனம்: "ரொம்ப சாரிமா... நடக்கக் கூடாதது நடந்துவிட்டது" - அஜித்குமார் தாய்க்கு ஸ்டாலின் ஆறுதல்

திருபுவனத்தில் நகை காணாமல் போன புகாரில் அஜித்குமார் என்ற இளைஞரை தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் இரண்டு நாள்களாக அடித்துத் துன்புறுத்தியதில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.காவல்துறையின் இந்த எதேச... மேலும் பார்க்க

'பாஜக கூட்டணி இல்லை என்றனர்; இப்போது மிக்சர் சாப்பிடுகின்றனர்' - அதிமுக குறித்து செந்தில் பாலாஜி

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை கொடிசியா பகுதியில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நம் முதலமைச்சர் ஆளுமை மிக்க முதலமைச்சராக இருக்கிறார். கோவை ம... மேலும் பார்க்க