செய்திகள் :

தென் கொரியா காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு! 27,000 பேர் வெளியேற்றம்!

post image

தென் கொரியா நாட்டில் பரவிய காட்டுத் தீயினால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

தென் கொரியா நாட்டின் தெற்குப் பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலையாலும் மற்றும் வீசும் பலத்த காற்றினாலும் தொடர்ந்து பரவும் காட்டுத் தீயினால் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில் அன்டோங் நகரம் மற்றும் பிற தென்கிழக்கு நகரங்களில் உள்ள சுமார் 27,000 பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், 9,000 தீயணைப்பு வீரர்கள், 130-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு தொடர்ந்து பரவும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 26 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய தீயணைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தென் கொரியாவின் உய்சோங் நகரத்த்தின் சியோங்சாங் கவுன்டியிலுள்ள ஒரு சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 2,600 கைதிகளை இடமாற்றும் பணியை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டிருந்தனர்.

மேலும், உய்சோங் மலைப்பகுதியில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி அதன் விமானி பலியானதாக தீயணைப்பு அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஹைதி: கும்பல் தாக்குதலில் கென்யா அதிகாரி மாயம்!

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட தீவுக்குச் சென்ற அமெரிக்கர் கைது!

இந்தியாவின் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளிலுள்ள தடை செய்யப்பட்ட தனித் தீவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒன்றான வடக்கு சென்... மேலும் பார்க்க

ஜப்பானில் நிலநடுக்கம்...!

ஜப்பான் நாட்டில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் மூன்றாவது மிகப் பெரிய தீவான கியூஷூவில், இன்று (ஏப்.2) இரவு 7.34 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலப்பரப்பிலிருந்து சுமார் 30 கி.ம... மேலும் பார்க்க

3 மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்! ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்பு!

3 முக்கிய மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்றுள்ளது. மத்திய ஆசியாவைச் சேர்ந்த தஜிகிஸ்தான் குடியரசு, உஸ்பெகிஸ்தான் குடியரசு மற்றும் கிர்கிஸ்தான் குடியரசு ஆகிய நாடுக... மேலும் பார்க்க

ஆட்சிக் கவிழ்ப்பின்போது கைதான முக்கிய அதிகாரிகளை விடுவித்த நைஜர் ராணுவ அரசு!

நைஜர் நாட்டின் ராணுவ அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்த முக்கிய அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளை விடுதலை செய்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு ராண... மேலும் பார்க்க

யூத மதகுருவைக் கொலை செய்த 3 பேருக்கு மரண தண்டனை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் யூத மதகுருவின் கொலை வழக்கில் கைதான 3 உஸ்பெகிஸ்தான் நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மால்டோவா மற்றும் இஸ்ரேல் நாட்டு குடியுரிமைப் பெற்றவர் ஸ்வி கோகன் (வயது 28) , இவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ரமலான் விடுமுறையினால் அகதிகளை நாடு கடத்துவதில் தாமதம்!

பாகிஸ்தானில் ரமலான் விடுமுறையினால் லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகள் நாடு கடத்தப்படுவதற்கான காலக்கெடுவானது தாமதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகளுக்கு அந்ந... மேலும் பார்க்க