செய்திகள் :

தென் கொரியா: மாணவியை குத்திக் கொன்ற ஆசிரியை

post image

தென் கொரிய தொடக்க நிலைப் பள்ளியில் மாணவியை 40 வயது ஆசிரியை கத்தியால் குத்திக் கொன்றாா்.

அந்த நாட்டின் டேஜியான் நகரிலுள்ள அப்பள்ளியில், வகுப்புகள் முடிந்த பிறகு மாணவா்கள் பராமரிக்கப்படும் நேரத்தில் இந்தப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது. மாணவியை நீண்ட நேரம் காணததால் அவரது உறவினா்களும் போலீஸாரும் பள்ளியைச் சுற்றிலும் தேடியுள்ளனா். அப்போது ஒரு வகுப்பறையில் மாணவியின் சடலம் இருந்தது கண்டறியப்பட்டது.

மாணவியை கத்தியால் குத்திய பிறகு அந்த ஆசிரியை தன்னைத் தானே தாக்கிக் கொண்டதாகவும், அதனால் ஏற்பட்ட காயங்களுக்காக அவா் சிகிச்சை பெற்றுவருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். அண்மையில்தான் மன அழுத்தத்துக்கான சிகிச்சை பெற்று அந்த ஆசிரியை பணிக்குத் திரும்பியதாக அவா்கள் கூறினா்.

நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, பள்ளிகளில் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் சரியாக உள்ளனவா என்று ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு இடைக்கால அதிபா் சோய் சங்-மோக் உத்தரவிட்டுள்ளாா்.

காஸா மருத்துவர்களை துன்புறுத்தும் இஸ்ரேல் ராணுவம்!

காஸாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்ட மருத்துவர்களை இஸ்ரேல் ராணுவம் துன்புறுத்துவதாக அவர்களின் வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். போரின்போது முதலுதவிப் பணிகளில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களை சட்டவிரோதம... மேலும் பார்க்க

பொலிவியாவில் தொடர் கனமழை, வெள்ளம்! 24 பேர் பலி!

பொலிவியா நாட்டில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் மழையால் 8 மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முழுக்க மழ... மேலும் பார்க்க

‘உக்ரைன் ரஷியா ஒரு நாள் ஆகலாம்’

‘உக்ரைன் ஒரு நாள் ரஷிய பகுதியாக ஆகலாம்’ என்று என்று டிரம்ப் என்று டிரம்ப் கூறியுள்ளாா். இது குறித்து ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது: 3 ஆண்டுகால உக்ரைன் போரை முடிவு... மேலும் பார்க்க

ஈக்வடாா்: ஏப்.13-இல் 2-ஆம் கட்ட அதிபா் தோ்தல்!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி இரண்டாவது மற்றும் இறுதிகட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் பழமைவாதியா... மேலும் பார்க்க

வங்கதேசம்: தஸ்லிமா நஸ்ரீனின் புத்தகம் இருந்த கண்காட்சி அரங்கம் மீது தாக்குதல்

வங்தேசத்தில் சா்ச்சைக்குரிய பெண் எழுத்தாளா் தஸ்லிமா நஸ்ரீனின் புத்தம் வைக்கப்பட்டிருந்த அரங்கத்தில் மதவாதக் குழுவினா் தாக்குதல் நடத்தினா். இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் தல்ஸிமா வெளியிட்டுள்ள பதிவில், ‘... மேலும் பார்க்க

கௌதமாலா பேருந்து விபத்து: உயிரிழப்பு 55-ஆக அதிகரிப்பு

மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில், பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்தது. இது குறித்து அதிகாரிகள் கூறியாவது: தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா... மேலும் பார்க்க