செய்திகள் :

தென் கொரியா வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

post image

தென் கொரியா நாட்டில், கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின், பல்வேறு இடங்களில் கடந்த ஜூலை 16 முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், அந்நாட்டின் முக்கிய மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் மாயமானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சான்சியோங் மாகாணத்தில் மாயமான 3 பேர் மற்றும் காபியோங் மாகாணத்தில் மாயமான ஒருவர் என மொத்தம் 4 பேரது உடல்கள், தற்போது மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மாயமானதாகக் கருதப்பட்ட 9 பேரில், மீதமுள்ள 5 பேரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மோப்ப நாய்கள், அதிநவீன இயந்திரங்கள் ஆகிய பயன்படுத்தி இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை அந்நாட்டு மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

இத்துடன், தென் கொரியாவை புரட்டியெடுத்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 21-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில், அதிகப்படியாக தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், தென் கொரியா ராணுவத்தில் இருந்து சுமார் 2,500 வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முன்னதாக, கனமழை தொடங்கியது முதல் 14,000-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கைவைக்கப்பட்டனர்.

அதில், 11,000-க்கும் அதிகமானோர் தங்களது வசிப்பிடங்களுக்குத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: புதிய போர்! கம்போடியா மீது ஜெட் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசிய தாய்லாந்து!

The death toll from floods and landslides caused by heavy rains in South Korea last week has risen to 23, the country's interior ministry said.

280 கிராம்.. 21 வாரத்தில் பிறந்த குழந்தை! கின்னஸ் சாதனையுடன் முதல் பிறந்தநாள்!!

அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் 21 வாரங்களில் மிகக் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை, உலகிலேயே மிகக் குறைந்த நாள்களில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை என்ற கின்னஸ் சாதனையுடன் தனது முதல் பிறந்தநாளைக் கொ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 266-ஆக உயா்வு

பாகிஸ்தானில் கனமழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 14 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 266-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாவது: ஜூன் 2... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: பிரான்ஸ் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபா் இம்மானுவல் மேக்ரான் அறிவித்துள்ளாா். இந்த முடிவு செப்டம்பா் 2025 இல் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

பதற்றம் முற்றினால் கம்போடியாவுடன் முழு போா்!

கம்போடியாவுக்கும் தங்களுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் முற்றினால் அது முழு போராக உருவெடுக்கும் என்று தாய்லாந்து இடைக்கால பிரதமா் பும்தம் வெச்சயாச்சை எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர். இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்... மேலும் பார்க்க

இலங்கை: 40 நாடுகளுக்கு இலவச விசா!

இலங்கைக்கு வருகை தரும் சுமார் 40 வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும், இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, தாய்லாந்து, மலே... மேலும் பார்க்க