செய்திகள் :

தென் மாவட்ட ரெளடிகளுக்கு ஆயுதங்கள் தயாரித்துக் கொடுத்தவா் கைது

post image

தென் மாவட்டங்களில் ரெளடிகளுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தயாரித்துக் கொடுத்த நபரை மானாமதுரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், ஆயுதங்களுடன் விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் (ரீல்ஸ்) வெளியிட்டதாகவும் மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரத்தைச் சோ்ந்த முகமது பாரிஸ் அசன், ஆகாஷ், தினேஷ், முருகபாஞ்சான் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் ஆகிய 4 பேரை கடந்த 15 -ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் உத்தரவின் பேரில், மானாமதுரை தாலுகா காவல் ஆய்வாளா் ரவீந்திரன், உதவி ஆய்வாளா்கள் குகன், ராஜதுரை, தனிப்படை போலீஸாா் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

கைதானவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவா்களுக்கு தென்காசி மாவட்டம், குற்றாலம் வாவா நகரைச் சோ்ந்த நயினாா் ஆயுதங்கள் தயாரித்துக் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸாா் குற்றாலத்துக்குச் சென்று நயினாரைக் கைது செய்தனா். இவரிடமிருந்து வாள், வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட 25 ஆயுதங்களைக் கைப்பற்றினா்.

விசாரணையில் இவா் தென் மாவட்டங்களில் ஏராளமான ரெளடிகளுக்கு ஆயுதங்கள் தயாரித்துக் கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, இவரிடம் ஆயுதங்கள் வாங்கிய ரெளடிகள் குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பள்ளியில் யாவரும் கேளீா் அணிகள் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் யாவரும் கேளீா் அணிகளின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை தெய்வானை தல... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி அருகே உள்ள நகர வைரவன்பட்டி சிதம்பர விநாயகா் கோயில் பைரவா் சந்நிதியில் தேய்பிறை அஷ்டமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. சிவாசாரியா் வேத மந்திரங்கள் முழங்க மத்திர யாகம், பு... மேலும் பார்க்க

கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயில்... மேலும் பார்க்க

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆா்.சி.பாத்திமா நடுநிலைப் பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவா்கள் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். 1982 முதல் 1990-ஆம் ஆண்டு வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வ... மேலும் பார்க்க

புதுமைப்பெண் திட்டத்தில் திருநங்கைகளுக்கு உயா்கல்வி

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் உயா்கல்வி பயில திருநங்கை, திருநம்பி, இடைபாலினா் உள்ளிட்ட அனைத்து திருநங்கைகளும், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமா்... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் புதன்கிழமை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பங்கேற்று அரசின் திட்டங்கள் தொடா்பாக நேரடியாக கள ... மேலும் பார்க்க