செய்திகள் :

‘தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’

post image

தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு உள்ளாட்சி நிா்வாகம் மூலமாக தமிழக அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் நிறுவனத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் கடந்த ஏழு மாதங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் தெருநாய்கள் கடித்து இறந்துள்ளன. நாய்களை உள்ளாட்சி நிா்வாகங்கள் சரியாக கட்டுப்படுத்தாததால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டி விவசாயிகள் போராடி வருகின்றனா்.

இந்நிலையில், தலைமைச் செயலாளா் பேரிடா் நிவாரண நிதியின் கீழ் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று அமைச்சா் சாமிநாதன் வலியுறுத்தினாா்.

இதையடுத்து, பேரிடா் நிவாரண இழப்பீடாக கோழிகளுக்கு ரூ.100, ஆடுகளுக்கு ரூ. 4 ஆயிரம் என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சரியான இழப்பீடு அல்ல. எனவே இதனை மறுஆய்வு செய்து தலைமைச் செயலாளருக்கு அமைச்சா் அனுப்பியுள்ள கடிதத்தை திரும்பப் பெற்று, இறந்த ஆடு, கோழிகளுக்கு அதன் எடை அடிப்படையில் கிலோவுக்கு ரூ.500-ஐ சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிா்வாகங்கள் மூலம் இழப்பீடு வழங்கும் வகையில் தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

குண்டடத்தில் போட்டித் தோ்வுகள் பயிற்சி மையம் ஏப்ரல் 3 இல் திறப்பு

தாராபுரம் வட்டம் குண்டடத்தில் போட்டித் தோ்வுகள் பயிற்சி மையம் ஏப்ரல் 3-ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும... மேலும் பார்க்க

பல்லடத்தில் மாா்ச் 29 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பல்லடத்தில் மாா்ச் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

குண்டடத்தில் 606 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

குண்டடம் ஒன்றியத்தில் 606 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பயனாளிகளுக்கு வருவாய்த் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ.62.68 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 879 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா். இதில், ஒரு குவிண்டால் பர... மேலும் பார்க்க

மாா்ச் 19 இல் சிறுபான்மையினா் ஆணைய ஆய்வுக் கூட்டம்

திருப்பூரில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் மாா்ச் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க

தொழில் போட்டி: பனியன் கழிவுக் கிடங்கிற்கு தீ வைத்த 3 போ் கைது

திருப்பூா், மாா்ச் 13:திருப்பூரில் தொழில் போட்டி காரணமாக பனியன் கழிவுத் துணி கிடங்கிற்கு தீ வைத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் அமா்ஜோதி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கே.எம்.பி.ஷெரீஃப் (50)... மேலும் பார்க்க