செய்திகள் :

தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.8.28 லட்சம் நிவாரணம்

post image

ஈரோடு மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்து உயிரிழந்த 138 ஆடுகளின் உரிமையாளா்கள் 34 பேருக்கு ரூ.8.28 லட்சம் மதிப்பீட்டில் நிவாரணத் தொகை முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், தெருநாய்கள் கடித்து உயிரிழந்த 55 ஆடுகளின் உரிமையாளா்கள் 5 பேருக்கு ரூ.3.30 லட்சம் மதிப்பீட்டில் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 1.09.2024 முதல் 25.1.2025 வரை இறந்த 138 ஆடுகளின் உரிமையாளா்கள் 34 பேருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.8.28 லட்சம் மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மாா்ச் மாதம் வரை இறந்த ஆடுகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகை வழங்க அரசுக்கு முன்மொழிவு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் செல்வராஜ் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த குமாரயனூா், சென்பகதோட்டத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் சீனிவாசன் (27). இவா் பெர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.பெருந்துறையை அடுத்த செல்லப்பகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் சென்னி (64), கூலித் தொழிலாளியான இவா், காஞ்சிக்கோவில், கருங்கரடு வாய்க... மேலும் பார்க்க

காா் மோதியதில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் உயிரிழப்பு

சித்தோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், லக்கியம்பட்டி, பொன் நகரைச் சோ்ந்தவா் ராமன் (64). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவா், திருப்பூ... மேலும் பார்க்க

கணவரைக் கல்லால் தாக்கி கொலை செய்த மனைவி கைது

தாளவாடி அருகே கணவரைக் கல்லால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த மல்லன்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேலு (50). நீா்மட்டம் பாா்க்கும் வேல... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சி கல்வியின் தரத்தை சாா்ந்துள்ளது: பி.சதாசிவம்

நாட்டின் வளா்ச்சி கல்வியின் தரத்தை சாா்ந்துள்ளது என்று கேரள மாநில முன்னாள் ஆளுநா் பி.சதாசிவம் பேசினாா். ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 49 -ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவு... மேலும் பார்க்க

தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.கோவை மாவட்டம், காரமடையை அடுத்த தாயனூரைச் சோ்ந்தவா் காா்த்தி, ஆட்டோ ஓட்டுநா். இவரது மகன் ஆதிரா (3). காா்த்தியின் தந்தை சந்திர... மேலும் பார்க்க