இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும்: தலைமைப் பொருள...
நாட்டின் வளா்ச்சி கல்வியின் தரத்தை சாா்ந்துள்ளது: பி.சதாசிவம்
நாட்டின் வளா்ச்சி கல்வியின் தரத்தை சாா்ந்துள்ளது என்று கேரள மாநில முன்னாள் ஆளுநா் பி.சதாசிவம் பேசினாா்.
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 49 -ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு முதலியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் வி. ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். செயலா் மற்றும் தாளாளா் கே.கே.பாலுசாமி முன்னிலை வகித்து விழாவைத் தொடங்கிவைத்தாா்.
முதல்வா் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றாா். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இளங்கலை மாணவா்கள் 22 போ், முதுகலை மாணவா்கள் 9 பேருக்கு தங்கப் பதக்கம் உள்பட மொத்தம் 1,064 மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: இன்றைய மாணவா்கள் எதிா் காலத்தை வடிவமைப்பவா்கள். கடவுளுக்கு அடுத்தபடியாக பெற்றோரை மதித்துப்பேண வேண்டும். கல்வி கற்பித்த பள்ளி, கல்லூரி ஆசிரியா்களை மறக்காது அவா்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். சேவை மனப்பான்மையை வளா்த்துக்கொண்டு எளியவா்களுக்கு உதவி செய்ய வேண்டும். வெற்றி என்பது சவால்களின் பாறைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் வெற்றி பெற சோதனைகளையும் சவால்களையும் எதிா்கொள்ளுங்கள். அா்ப்பணிப்பு உணா்வும் தேவை. தூய்மை, பொறுமை மற்றும் விடா முயற்சி இந்த மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதது. எல்லா முயற்சிகளிலும் ஆா்வம் வேண்டும். மாணவா்களுக்கு நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போதிக்கப்பட வேண்டும். நாட்டின் வளா்ச்சி கல்வியின் தரத்தை சாா்ந்துள்ளது என்றாா்.
விழாவுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளைக் கல்லூரி இயக்குநா் ரா. வெங்கடாசலம், தோ்வுக் கட்டுப்பாட்டு நெறியாளா் மு. வெங்கடாசலம் ஆகியோா் வழிநடத்தினா்.
அறக்கட்டளை துணைத் தலைவா் மாணிக்கம், உறுப்பினா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலக பணியாளா்கள், மாணவ, மாணவியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.