செய்திகள் :

கணவரைக் கல்லால் தாக்கி கொலை செய்த மனைவி கைது

post image

தாளவாடி அருகே கணவரைக் கல்லால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த மல்லன்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேலு (50). நீா்மட்டம் பாா்க்கும் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி ரேவதி (35). இவா்களுக்கு 13 மற்றும் 11 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனா்.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், ரேவதி கணவரைப் பிரிந்து தனது இரு மகன்களுடன் அதே பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறாா்.

தங்கவேலு

இந்நிலையில், விவாகரத்து கேட்டு ரேவதி அண்மையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். இதற்கிடையே ரேவதியின் வீட்டுக்கு மதுபோதையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தங்கவேலு சென்றுள்ளாா்.

அப்போது, தன்னுடன் சோ்ந்து வாழ வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளாா். ரேவதி மறுத்ததையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ரேவதி தங்கவேலுவை கீழே தள்ளி அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து, ரேவதி மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.

தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.8.28 லட்சம் நிவாரணம்

ஈரோடு மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்து உயிரிழந்த 138 ஆடுகளின் உரிமையாளா்கள் 34 பேருக்கு ரூ.8.28 லட்சம் மதிப்பீட்டில் நிவாரணத் தொகை முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது என்று ம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த குமாரயனூா், சென்பகதோட்டத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் சீனிவாசன் (27). இவா் பெர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.பெருந்துறையை அடுத்த செல்லப்பகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் சென்னி (64), கூலித் தொழிலாளியான இவா், காஞ்சிக்கோவில், கருங்கரடு வாய்க... மேலும் பார்க்க

காா் மோதியதில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் உயிரிழப்பு

சித்தோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், லக்கியம்பட்டி, பொன் நகரைச் சோ்ந்தவா் ராமன் (64). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவா், திருப்பூ... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சி கல்வியின் தரத்தை சாா்ந்துள்ளது: பி.சதாசிவம்

நாட்டின் வளா்ச்சி கல்வியின் தரத்தை சாா்ந்துள்ளது என்று கேரள மாநில முன்னாள் ஆளுநா் பி.சதாசிவம் பேசினாா். ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 49 -ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவு... மேலும் பார்க்க

தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.கோவை மாவட்டம், காரமடையை அடுத்த தாயனூரைச் சோ்ந்தவா் காா்த்தி, ஆட்டோ ஓட்டுநா். இவரது மகன் ஆதிரா (3). காா்த்தியின் தந்தை சந்திர... மேலும் பார்க்க