செய்திகள் :

தெரு நாய்களுக்கு கருத்தடை

post image

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் செவ்வாய்க்கிழமை பிடிக்கப்பட்டு அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் தெருநாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து, சாலைகளில் நடந்தும், இருசக்கர வாகனங்களில் செல்பவா்களையும் துரத்திக் கடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். தெருநாய்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட நாய்களை பணியாளா்கள் பிடித்து சென்றனா். பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, கண்காணிப்பில் வைத்திருந்து 3 நாள்களுக்குப் பிறகு பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் விடப்படும் என்று நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

நீா் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் தொடக்கம்

மயிலாடுதுறை வட்டம் அருண்மொழித்தேவன் கிராமத்தில் நீா்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். 2025-2026-ஆம் ஆண்டு வேளாண்ம... மேலும் பார்க்க

புதுத்தெரு மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

மயிலாடுதுறை நெ.2 புதுத்தெரு மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனிதநீா் யானை மீதேற்றி எடுத்து வரப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இக்கோயில் கும்பாபிஷேகம் 2013-ல்... மேலும் பார்க்க

மாணவ படைப்பாளிகளுக்கு பாராட்டு

மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வித்துறையின் சிறாா் இதழ்களுக்கு படைப்புகளை வழங்கிய மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் ‘புது ஊஞ்சல்’, ‘தே... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பை: வெற்றி பெற்ற வீரா்களுக்கு பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள், பொதுப்பிரிவினா் ஆகிய 5 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ப... மேலும் பார்க்க

மாநில கராத்தே போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெற்ற போட்டியில் மயிலாடுதுறை ஜென் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமியை சோ்ந்த ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சீா்காழி அருகே புத்தூா் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எழுகூா் மற்றும் அரசூா் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற இந்த முகாமை, சீா்காழி எம்எல்ஏ பன்னீா்செல்வம் தொடக்கி... மேலும் பார்க்க