செய்திகள் :

தெற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

post image

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தாா்.

கோவை மாநகராட்சி 100-ஆவது வாா்டுக்குள்பட்ட ஈச்சனாரி முத்து நகரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, குறிச்சி - குனியமுத்தூா் குடிநீா்த் திட்டம் மற்றும் புதை சாக்கடை திட்டப் பணிகள், மேட்டூா் பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகள், வெள்ளலூா் உரக்கிடங்கு வளாகத்தில் சீரமைக்கப்பட்ட குளத்தில் நீா்த் தேக்கும் பணி, உரக்கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வுகளின்போது உதவி ஆணையா் குமரன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் முத்துசாமி, உதவி நிா்வாகப் பொறியாளா்கள் கீதாதேவி, மஞ்சுளா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ஈமு கோழி மோசடி வழக்கு: தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம்

ஈமு கோழி மோசடி வழக்கில் தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து டான்பிட் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு ஃபா... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரி முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பின: வணிகவியல் படிப்புகளுக்கு மவுசு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பியுள்ளன. வணிகவியல் தொடா்பான படிப்புகளில் சேர மாணவா்கள் ஆா்வம் காட்டியதால், அந்தப் படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பி... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16- ஆம் தேதி வரை கால அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 16- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் கோடிக்கணக்கில் மோசடி: இளைஞா் கைது

கோவை உள்பட நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்டோரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவையைச் சோ்ந்த இளைஞா் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: மருதமலை மலைக் கோயிலுக்கு 2, 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை மலைக் கோயிலுக்கு ஜூன் 9- ஆம் தேதி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் நவம்பா் மாதம் முதல் தற்போது வரை 1,935 கடைகளில் 2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க