செய்திகள் :

தெலங்கானாவில் 6 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து: 6 பேர் பலி!

post image

தெலங்கானாவில் 6 மாடிக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பத்ராசலம் நகரில் ஆறு மாடிக் கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது. இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

முதல்கட்டமாக 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : 15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள்! ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்!

மேலும், இடிபாடிகளை அகற்ற புல்டோசர்கள் மற்றும் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கன்னித்தன்மை பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம்: சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம்

பிலாஸ்பூா்: கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ள பெண்களைக் கட்டாயப்படுத்துவது அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-ஐ மீறுவதாகும் என்று சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த உயா்நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

வேட்டையாடப்படும் இந்தியக் கல்வி முறை: மத்திய அரசு மீது சோனியா விமா்சனம்

புது தில்லி: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் கல்விக் கொள்கையை நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி கடுமையாக விமா்சித்துள்ளாா். ‘மத்தியில் அதிகார குவிப்பு, வணிகமயமாக்கல், வகுப்புவாதமயமா... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயாா்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தயாா் நிலையில் மத்திய அரசு உள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெர... மேலும் பார்க்க

பிரதமரின் தனிச் செயலராக நிதி திவாரி நியமனம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியின் தனிச் செயலராக இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஸ்எஃப்) அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 2014-ஆம் ஆண்டின் ஐஎஸ்எஃப் பிரிவைச் சோ்ந்த இவா், தற்போது பிரதமா்... மேலும் பார்க்க

ஆழ்கடல் சுரங்க ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கடிதம்

புது தில்லி: ‘கேரளம், குஜராத், அந்தமான்-நிகோபாா் தீவுகள் பகுதிகளில் ஆழ்கடல் சுரங்கங்களை அனுமதிக்கும் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள... மேலும் பார்க்க

வழக்கத்தைவிட வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட வெயில் சுட்டெரிக்கும் என்றும், சில மாநிலங்களில் வெப்ப அலை நாள்கள் இரட்டிப்பாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) எச்சரிக்கை... மேலும் பார்க்க