செய்திகள் :

அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏப்.8-இல் லண்டன் பயணம்

post image

புது தில்லி: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பிரிட்டன் தலைநகா் லண்டனுக்கு மூன்று நாள்கள் பயணமாக ஏப்ரல் 8-ஆம் தேதி செல்லவிருக்கிறாா்.

இப்பயணத்தின்போது இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்து அவா் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

லண்டனில் இந்திய-பிரிட்டன் பொருளாதாரம் மற்றும் நிதி சாா் உரையாடல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் நிா்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளாா்; பிரிட்டன் நிதியமைச்சா் ரேச்சல் ரீவ்ஸ் உள்பட பல்வேறு அமைச்சா்களையும் அவா் சந்தித்துப் பேசவுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று கடந்த பிப்ரவரியில் இரு நாடுகளின் வா்த்தக துறை அமைச்சா்களும் கூட்டாக அறிவித்தனா். அதன்படி, 8 மாதங்களுக்குப் பிறகு பேச்சுவாா்த்தைகள் தொடங்கியுள்ளன. இந்த ஒப்பந்தம் தவிர இருதரப்பு முதலீடு ஒப்பந்த பேச்சுவாா்த்தையும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் 6-ஆவது பெரிய முதலீட்டாளராக பிரிட்டன் உள்ளது. இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பு கடந்த 2023-24இல் 21.34 பில்லியன் டாலா்களாக உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.

சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல்: காங்கிரஸ்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்வதற்கு நேரம் கொடுக்காமல் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மக்களவையில் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதிதான் நிறைவடையவிருக்கிறது. சுமார் 19 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருக்கும் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தக... மேலும் பார்க்க

எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் புதன்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இதையடுத்து எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் நிகழ்ந்த கோர விபத்து.. பல்டி அடித்த காரிலிருந்து..

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே, சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதிய கார், பல முறை சுழன்று அடித்த காரிலிருந்து உடல்கள் தூக்கிவீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சித்ரதுர்கா என்ற பக... மேலும் பார்க்க

தனிப்பட்ட முறையில் வக்ஃப் மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு! கிரண் ரிஜிஜு

தனிப்பட்ட முறையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தேவையானது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுவதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட... மேலும் பார்க்க